பக்கம் எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
260

New Page 1

சேட் படை

    முருகு தலைச்சென்ற கூழை
        முடியாமுலைபொடியா
    ஒருகு தலைச்சின் மழலைக்கென்
        னோவைய வோதுவதே.

104

12.16 மறைத்தமை கூறி நகைத்துரைத்தல்

   
மறைத்தமை கூறி நகைத்துரைத்தல் என்பது இவளதிளமை கூறுகின்றது தழைவாங்குதற்பொருட்டன்றாகவேண்டும்; அதுவன்றி இந்நாளெல்லாமியைய மறுத்து இப்பொழுது இவளிளையளென்று இயையாமைகூறி மறுக்கவேண்டிய தென்னை? இனி யிவ்வொழுக்கம் இவளையொழிய வொழுகக் கடவேனென உட்கொண்டுநிற்ப, நீ யென்னை மறைத்தகாரியம் இனி நினக்கு முடியாதென அவனோடு நகைத்துக் கூறாநிற்றல். அதற்குச் செய்யுள்-

105. பண்டா லியலு மிலைவளர்
        பாலகன் பார்கிழித்துத்
    தொண்டா லியலுஞ் சுடர்க்கழ
        லோன்தொல்லைத் தில்லையின்வாய்

____________________________________________________________

பெருந்துறைப் பிள்ளை-பெருந்துறைக்கணுளளாகிய எம் பிள்ளையுடைய; கள் ஆர் முருகு தலைச்சென்ற கூழை முடியா-தேனார்ந்த நறுநாற்றம் தம்மிடத்தடைந்த குழல்கள் முடிக்கப்படா; முலை பொடியா-முலைகள் தோன்றா; ஒரு குதலைச் சின் மழலைக்கு-ஒரு குதலைச் சின்மழலை மொழியாட்கு; ஐய-ஐயனே; ஓதுவது  என்னோ-நீ  சொல்லுகின்றவிது  யாதாம்! சிறிதுமியைபுடைத்தன்று எ-று.

    ஏகாரம்: அசைநிலை. கள்ளார் கூழையென வியையும். குதலைமை-விளங்காமை. மழலை-இளஞ்சொல். சின்மழலை திறத்தென நான்காவது ஏழாவதன் பொருட்கண் வந்ததெனினு மமையும். இவை நான்கற்கும் மெய்ப் பாடும் பயனும் அவை.

104

12.16.  என்னைமறைத்தபின் எண்ணியதரிதென
      நன்னுதல்தோழி நகைசெய்தது.


   
இதன் பொருள்: பண்டு ஆல் இயலும் இலை வளர் பாலகன்-முற்காலத்து ஆலின்கணுளதாம் இலையின்கட்டுயின்ற பாலகனாகிய