25
பரத்தையிற்
பிரிவு
25.2 பொறையுவந்துரைத்தல்
பொறையுவந்துரைத்தல் என்பது
தலைமகனைப் பரத்தையரெதிர் கொண்டமை கேட்ட தலைமகள் நெஞ்சுடைந்து புறத்து வெளிப்படாமற் பொறுத்தமை
கண்ட தோழி, யானிவ்வாறாகவும் கலங்காது நின்ற பெரும்பொறையாட்டியை யான் இன்று பேசுவன என்னென்று
அவளையுவந்து கூறாநிற்றல். அதற்குச் செய்யுள்-
353. சுரும்புறு கொன்றையன்
தொல்புலி
யூர்ச்சுருங்
கும்மருங்குற்
பெரும்பொறை யாட்டியை யென்இன்று
பேசுவ பேரொலிநீர்க்
கரும்புறை யூரன் கலந்தகன்
றானென்று கண்மணியும்
அரும்பொறை யாகுமென்
னாவியுந்
தேற்வுற் றழிகின்றதே.
353
__________________________________________________
25.2. கள்ளவிழ் கோதையைக்
காதற் றோழி
உள்ளவிழ் பொறைகண் டுவந்து ரைத்தது.
இதன் பொருள்: பேரொலி
நீர்க் கரும்பு உறை ஊரன் கலந்து அகன்றான் என்று - பெரிய வொலிக்கு நீரையுடைய கரும்புதங்கு
மூரை யுடையவன் கலந்துவைத்து நீங்கினானென்று கருதுதலான்; கண்மணியும் அரும் பொறை ஆகும் - எண்கண்மணியும்
பயனின்மை யாற் றாங்குதற்கரிய பாரமாகாநின்றன; என்ஆவியும் தேய்வுற்று அழிகின்றது - எனதுயிருந்
தேய்ந்தழியா நின்றது; பெரும் பொறை யாட்டியை என் இன்று பேசுவ-யானிவ்வாறாகவுங் கலங்காது நின்ற
பெரும்பொறையையுடையவளை யான் இன்று பேசுவனவென்! எ-று.
சுரும்பு உறு கொன்றையன் தொல்
புலியூர்ச் சுருங்கும் மருங்குல் பெரும் பொறையாட்டியை - சுரும்புகள் வாழுங் கொன்றைப் பூவினை யுடையானது
பழையதாகிய புலியூரிற் சுருங்கின மருங்குலையுடைய பெரும்பொறையாட்டியையெனக் கூட்டுக.
என் கண்மணியுந் தேய்வுற்றழியாநின்றது
ஆவியுமரும்
|