பக்கம் எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
612

கல

பரத்தையிற் பிரிவு

    கல்லாண் டெடேல்கருங் கண்சிவப்
        பாற்று கறுப்பதன்று
    பல்லாண் டடியேன் அடிவலங்
        கொள்வன் பணிமொழியே.

387

25.37 விருந்தொடு செல்லத்து1 ணிந்தமை கூறல்

   
விருந்தொடு செல்லத் துணிந்தமை கூறல் என்பது வாயில் பெறாதுபாணன் புலந்து நீங்காநிற்ப, யாவர்க்கும் வாயினேராது வெகுண்டுரைத்தலாற் றழல்வேல்போல மிளிர்ந்து முத்தம் பயக்கு மிவளுடையகண்கள் விருந்தொடு வந்தானென்று சொல்லுமளவிற் பண்டைநிறமாகிய கருங்குவளையது செவ்வி பரந்த; என்ன மனையறக் கிழத்தியோவென இல்லோர்தம்முட் கூறாநிற்றல். அதற்குச் செய்யுள்-

388. மத்தக் கரியுரி யோன்தில்லை
        யூரன் வரவெனலுந்
    தத்தைக் கிளவி முகத்தா
        மரைத்தழல் வேல்மிளிர்ந்து

_________________________________________________

கருங்கண்ணினது சிவப்பெனினுமமையும். பல்லாண்டென்றது தலைமகனுடனுண்டாகிய வெறுப்புத் தீர்ந்து கூடியிருமென்று சொல்லியது நுமக்குத் தவறாயிற்றாயின் பல்லாண்டும் இப்படியிருப்பீ ரென்றான். இப்படியிருப்பீரென்றது பல்லாண்டு மிப்படித் தனித் திருப்பீரென்று வளமாகத் தன்பாணவார்த்தை சொல்லிய வாறென்றறிக. புருவநெறிக்கவென்பதூஉம் வெவ்வாயென்பதூஉம் பாடம். புரி - நரம்பு. மெய்ப்பாடு: அச்சம். பயன்: சிவப்பாற்று வித்தல்.

387

25.37.  பல்வளை பரிசுகண்டு
       இல்லோர் இயம்பியது.

   
இதன் பொருள்: மத்தக் கரி உரியோன் தில்லை ஊரன் வரவு எனலும்-களிப்பையுடைத்தாகிய யானையின்றோலையுடைய வனது தில்லையூரனது வரவென்று சொல்லத் தொடங்குதலும்; தத்தைக் கிளவி முகத் தாமரைத் தழல் வேல் மிளிர்ந்து - கிளியின் மொழி போலும் மொழியையுடையாளது முகமாகிய தாமரைக் கண்ணே

___________________________

    1தணிந்ததை பாடபேதம்