அப
மாணிக்கவாசகர் வரலாறு
அப்போது அரசனுடைய குதிரைச் சேவகர்கள்
அங்கு வந்து ‘அரசரேறே! நமது குதிரைப் படைகள் குறைந்து விட்டன. வயது முதிர்ந்த குதிரைகளும், நோய்
நிறைந்த குதிரைகளுமே இப்போது உள்ளன. சிறந்த குதிரைகள் நம்மிடம் இல்லை. ஆதலின் குதிரைப்
படைகளைப் பலப்படுத்த வேண்டும் என்று நினைவுறுத்துவது எங்கள் கடமை’ என்று வணங்கித் தெரிவித்துக்
கொண்டார்கள். அப்போது அரசவையிலிருந்து சில தூதர்கள் கீழைக் கடற்கரையில் நல்ல குதிரைகள்
வந்து இறங்கியிருக்கின்ற செய்தியை அரசனிடத்துத் தெரிவித்தார்கள். அரசன் அமைச்சர்
பெருமானாகிய பிரமராயரைப் பார்த்து “நம்முடைய கருவூலத்திலிருந்து வேண்டும் பொருள்களைப் பணியாளர்
மூலம் எடுத்துச் சென்று நல்ல குதிரைகளை வாங்கி வருக” என்று ஆணையிட்டான்.
வாதவூரரும் அக்கட்டளையை ஏற்றுப்
பொற்பண்டாரத்தைத் திறந்து அளவிறந்த பொருள்களை ஒட்டகத்தின் மீதேற்றிக் கொண்டு,
படைகளும் பரிசனங்களும் தன்னைச் சூழ்ந்துவர மதுரைச் சொக்கேசன் ஆலயத்திற்குச் சென்று வணங்கி
மதுரையை விட்டுப் புறப்பட்டார். பல காதங்களைக் கடந்து திருப்பெருந்துறையென்னும் தலத்தை அடைந்தார்.
அவ்வூரை அணுக அணுக அவர்மேல் இருந்த ஏதோ ஒரு சுமை குறைந்து வருவது போலத் தோன்றியது. இத்தலமே
இறைவன் தன்னை ஆட்கொள்ளும் இடம் போலும் என்ற உணர்வு தோன்றியது.
குரு உபதேசம் :
அவ்வேளையில் சிவநாம முழக்கம்
எங்கிருந்தோ வருவது அவர் செவிகளுக்கு எட்டியது. அவ்வொலி வரும் திசைநோக்கி வாதவூரரும் விரைந்து
சென்றார். ஓரிடத்தில் கல்லால மரம் போன்ற பெரியதொரு குருந்த மரத்தடியில் சீடர்கள் சிலரோடு
சிவபெருமானே குருநாதராய் எழுந்தருளியிருந்தார். வேத சிவாகமங்களும், புராண இதிகாசச் சமய நூல்களும்
ஆகிய பல நூல்களையும் கற்றுத்தெளிந்த சிவகணநாதர்கள் அக்குருநாதரிடம் சீடர்களாக விளங்கினர்.
அச்சீடர்களின் பாசமாம் பற்றறுக்கும், ஆசானாக அக்குருநாதர் வீற்றிருந்தார். அவரது வலத் திருக்கை
சின்முத்திரையைக் காட்டிக் கொண்டிருந்தது. அவரது திருமுகம் ஒளி மண்டலமாகத் திகழ்ந்தது. அவரது
கண்கள் திருவருள் விளக்கத்தைச் செய்து கொண்டிருந்தன. இவ்வாறு வீற்றிருந்த குருநாதரைக் கண்ட
வாதவூரர் தாம் பல நாள்களாக விரும்பியிருந்த குருநாதர் இவரேயென்று எண்ணினார். காந்தம் கண்ட
இரும்புபோல மணிவாசகர் வாதவூரர் மனம் குருநாதர்
|