பக்கம் எண் :

102கல்லாடம்[செய்யுள்11]



  பெறநிதி கொடுக்கென வுறவிடத் தருளிய
30
  மாதவர் வழுத்துங் கூடற் கிறைவ
னிருசரண் பெருகுநர் போலப்
பெருமதி நீடுவர் சிறுமதி நுதலே.

(உரை)
கைகோள்: கற்பு. தலைவன் கூற்று

துறை: ஓதற்குப் பிரிய நினையும் தலைவன் தன் கருத்தினைத் தலைவிக்குக் கூறி ஆற்றுவித்தற் பொருட்டுக் குறிப்பாகத் தோழியை நோக்கிக் கல்வியின் நன்மையைப் பெரிதும் பாராட்டிக் கூறுதல்.

     (இ-ள்) இதற்கு, “ஒன்றாத் தமரினும்” (தொல். 44. அகத்.) எனவரும் நூற்பாவின்கண், ‘வாயினுங் கையினும் வகுத்த பக்க்மொடு ஊதியம் கருதிய ஒருதிறத் தானும்’ என வரும் விதிகொள்க.

1-5: நிலையினின்.............................................ஆகியும்

     (இ-ள்) நிலையினில் சலியா நிலையாமயானும்-தான் நிற்கும் நிலையினின்றும் அசையாத தன்மை உடைமையானும்; பல உலகு எடுத்த ஒருதிறத்தானும்-நாடுகள் பலவற்றையும் கைகொண்ட ஒப்பற்ற ஆற்றலுடைமையானும்; நிறையும் பொறையும் பெறும் நிலையானும்-நிறத்தையுடையவனும் பொறையுடைமையும் உண்டாகும் இயல்புடைமையானும்; தேவர் மூவருங் காவலானும்-படைத்தலும் காத்தலும் அழித்தலுமாகிய முத்தொழிலையுமுடைய நான்முகனும் திருமாலும் சிவபெருமானுமாகிய இறைவர் மூவரும் தனக்குக் காவலாய் இருத்தலானும்; பராரைத் தமனியச் சைலம் ஆகியும்-பரிய அடிப்பகுதியையுடைய பொன்னாகிய மகமேரு வாகியும் என்க.

     (வி-ம்.) இதன்கண் கல்விக்கு மேருமலை உவமையாகக் கூறப்படுகின்றது. பொதுத் தன்மைகள் வருமாறு. கல்வியும் அறம் பொருள் இன்பம் வீடு என்னும் உறுதிப் பொருள்களை உணர்த்தும் தன்னிலையிற் சலியாமையும், மேருவும்தான் உலகிற்கு நடுவாக நிற்கும் நிலையிற் சலியாமையும் காண்க. இனி, கல்வியும் பலநாட்டிலும் பரவித் தன்வயப்படுத்தும் ஆற்றலுடைத்தாதலும் மேருவும் உலகத்தைத் தாங்குதலும் காண்க. பல உலகு என்றது குறிஞ்சி முதலிய திணைகலை என்னை! மாயோன் மேய காடுறை உலகமும்...............என வருதலும் காண்க. இனி, கல்வியும் நிறை உடைத்தாதலும் எல்லாப் பொருள்களையும் தனக்குள் பொறுத்திருத்தலும் மேருவும் ஏனைப் பொருள்களினுங் காட்டில் நிறைவுடையதாயிருத்தலும் உலகினைச் சுமத்தலும் காண்க.