பக்கம் எண் :

280கல்லாடம்[செய்யுள்32]



     (வி-ம்.) பழுத்த மரங்களை அவற்றின் பழத்தை உண்ணக் கருதி வண்டுகளும் பறவைகளும் அடையுமாறுபோலே இந்த யானையின் மதத்தையுண்ணவும் அதனால் கொலையுண்ணும் ஏனைய உயிரினங்களின் உடலைத் தின்னக் கழுகு பருந்து முதலிய பறவைகளும் தொடரும் என்பது கருத்து. மேகம் அதன் விரைவினாலே ஈர்ப்புண்டு பிந்தொடர்ந்தன என்க. பிடியானைகள் அவாவினாலே தொடரும் என்றவாறு. கணையும் தொடரா எனவே என் கணைக்குத் தப்பி அக்கணையினும் விரைந்து ஓடிற்று என்றானாயிற்று, புரிந்து-விரும்பி.

     இனி இதனை, மகளிர்காள்! நும் பசும்புனத்தின்கண் மத முதலியவற்றையுடைய ஒருத்தல் ஒன்று வண்டுகளும் பறவைகளும் கணையும் முகிலும் பிடியும் தொடர ஏகியதுண்டே புரிந்து கூறுதிர் என வினை முடிவு செய்க. அறுகாற் கணம் என்றது வண்டுக் கூட்டத்தை. பழுமரம் பின்தொடர என்பர் பழைய உரையாசிரியர். அது பொருந்தாமை யுணர்க. மெய்ப்பாடும் பயனும் அவை.