|
|
குண்டுநீ
ருடுத்த நெடும்பா ரெண்ணமும்
எண்ணா விலக்கமொடு நண்ணிடு துயரமும் |
25
|
|
அளந்துகொடு
முடித்த னின்கட னாதலின்
வரியுடல் சூழக் குடம்பைநூ றெற்றிப்
போக்குவழி படையார் துள்ளுயிர் விடுத்தலின்
அறிவுபுறம் போய வுலண்டது போலக்
கடற்றிரை சிறுக மலக்குதுயர் காட்டும் |
30
|
|
உடலெனும்
வாயிற் சிறைநடுவு புக்குப்
போகா துணங்குறும் வெள்ளறி வேழமும்
ஆரணம் போன்றுநின் காலுற வணங்குதும்
கான்முக மேற்ற தொளைகொள்வாய்க் கறங்கும்
விசைத்தநடை போகுஞ் சகடக் காலும் |
35
|
|
நீட்டிவலி
தள்ளிய நெடுங்கயிற் றூசலும்
அலமரு காலு மலகைத் தேரும்
குறைதரு பிறவியி னிறைதரு கலக்கமும்
எம்மனத் தெழுந்த புன்மொழித் தொகையும்
அருள்பொழி கடைக்கண் டாக்கித் |
4..
|
|
தெருளுற வைய முடிப்பையின் றெனவே. |
(உரை)
1-4:
திங்கள்.................முகத்த
(இதன்பொருள்)
திங்கள்முடி பொறுத்த-பிறைத்திங்களை தலைமிசைத் தாங்கிய, பொன்மலை அருவி-பொன்மலையினின்றும்
வீழுகின்ற அருவியானது; கருமணி கொழுத்த தோற்றம் போல-நீலமணியைக் கொழிக்கின்ற
காட்சியை யொப்ப; இருகவுள் கவிழ்த்த மத நதி உவட்டின்-தன் இரண்டு கவுள்களும் சிந்திய
மத நீராகிய யாற்றினது பெருக்கின்கண், வண்டினம் புரளும்-வண்டுக் கூட்டங்கள் வீழ்ந்து
புரளுதற்குக் காரணமாய்; வயங்கு புகர் முகத்த-விளங்குகின்ற புள்ளிகளை யுடைய யானை முகத்தையுடையோய்
என்க.
(விளக்கம்)
திங்கள்-ஈண்டுப் பிறைத்திங்கள். பொன்மலை மூத்த பிள்ளையாருக்கும் மணி வண்டினத்திற்கும்
உவமைகள். கவிழ்தல்-சிந்துதல். மதநதி-மத நீராகிய யாறு. உவடு-பெருக்கு. வயங்குபுகர்;
வினைத்தொகை. புகர்-புள்ளி. முகத்த: விளி. இருகவுள்-இரண்டு கன்னம். வயங்கு-விளங்கும்.
பொன்மலை-இமயமலை. பொறுத்த-தாங்கிய.
|