பக்கம் எண் :

38கல்லாடம்[செய்யுள்3]



  நிறைநீர்க் கயத்து ளொருதா ணின்று
20
  தாமரை தவஞ்செய் தளியுடன் பெற்ற
திருமகட் கடுத்த தென்னென்
றொருமை காண்குவர் துகர்க்கிளைக் கொடியே.

(உரை)

கைகோள்: களவு. தோழி கூற்று.
துறை: வழியொழுகி வற்புறுத்தல்.
(இ-ம்.) இதற்கு “ஆங்கதன் தன்மையின் வன்புறையுளப் பட” என்னும் (தொல்-கள. 23) விதிகொள்க.

22: துகிர்..........................கொடியே

     (இ-ள்) கிளை துகிர் கொடியே-கிளையினையுடைய பவளக்கொடியை ஒத்த நங்காய் என்க.

     (வி-ம்.) கிளைதுகிர் கொடி என மாறுக. துகிர்க்கிளைக்கொடி: பன்மொழித் தொகை. விளி: தோழி தலைவியை விளித்தபடியாம்.

1 - 9: பகை.....................................கொண்டால்

     (இ-ள்) பகையுடன் கிடந்த நிலை பிரி வழக்கினை-பழம் பகை உறவாகாது என்று எண்ணாமல் நெடுங்காலம் பகையோடு கிடந்த தன் ஆட்சி நிலை தன்னைவிட்டு நீங்குதற்கேதுவான வழக்கினை; பொருத்தலும்-ஒருவாறு தீர்த்து அப்பகைவரோடு கூடுதலும்; பிரித்தலும்-தனக்குத் துணையாவாரைத் தன்பானின்றும் விலக்குதலும்; பொருபகை காட்டலும்-வலியும் காலமும் இடமுமறியாது தன்னோடு போர் செய்தற்குரிய வலிய பகையை உண்டாக்கிஒ கோடலும்; உள் பகை அமைத்தலும்-புறப் பகைக்கிடனாக்கிக் கொடுத்து அவர் வெல்லுந்துணையும் உள்ளாய் நிற்கும் பகையை உண்டாக்கலும்; உணர்ந்து சொல் பொருத்தலும்-தன் பகையாயினார் தனக்கு நல்லன போல வஞ்சகமாகத் தனக்குணர்த்தும் சொல்லின் பயன் தெரியாது ஏற்றுக் கோடலும்; ஒரு தொழிற்கு இரு பகை தீராது வளர்த்தலும்-தன் ஆட்சித் தொழிலாகிய ஒன்றனுக்கு இருவேறு பகைவர் தோன்றியவழி அவ்விருவருள் ஒருவரோடு கேண்மைகொண்டு அவரை ஏனையோர்பால் எடுத்துவிட்டுத் தன் றெழிலைத்தீராமல் அவ்விருபகையையும் வளர்த்துக் கோடலும் ஆகிய இக்குற்றங்களையும்; செய்யா-செய்துவைத்து; அமைச்சுடன் சேரா-நல்லமைச்சரோடுங் கூடுதலில்லாத; அரசன்-அறிவிலியாகிய ஒரு மன்னவனுடைய ஆட்சியிலமைந்த; நாடு