பக்கம் எண் :

மூலமும் உரையும்395



தொகை. கூர்-ஈண்டுச் சிறப்பு. குன்று அன்ன மா என்றமையால் மா யானை என்பது பெற்றாம். சீறூர் - குறிஞ்சி நிலத்திலுள்ள ஊர். சிறுமி என்றாள் இளையள் விளைவிலள் என்றற்கு. குறிஞ்சி நிலம் என்பதற்கு மாபதைப்பச் சிங்கம் திரிதரும் சீறூர் என்றாள். மெய்ப்பாடு: அச்சத்தைச் சார்ந்த பெருமிதம். பயன்- தலைவனை ஆற்றுவித்தல்.

 
 

செய்யுள் 51

நேரிசையாசிரியப்பா

 
   
5
  பெருமறை நூல்பெறு கோன்முறை புரக்கும்
பெருந்தகை வேந்த னருங்குணம் போல
மணந்தோர்க் கமுதுந் தணந்தோர்க் கெரியும்
புக்குழிப் புக்குழிப் புலன்பெறக் கொடுக்கு
மலையத் தமிழ்க்கால் வாவியுட் புகுந்து
10
  புல்லிதழ்த் தாமரைப் புதுமுகை யவிழ்ப்ப
வண்டினம் படிந்து மதுக்கவர்ந் துண்டு
சேயிதழ்க் குவளையி னிரைநிரை யுறங்கு
நிலைநீர் நாட னீயே யிவளே
மலையுறை பகைத்து வானுறைக் கணக்கும்
15
  புட்குலஞ் சூழ்ந்த பொருப்புடைக் குறவர்தம்
பெருந்தேன் கவருஞ் சிறுகுடி மகளே
நீயே, ஆயமோ டார்ப்ப பரிகிணை முழக்கி
மாயா நல்லறம் வளர்நாட் டினையே
இவளே, தொண்டகம் துவைப்பத் தொழிற்புனம் வளைந்து
20
  பகட்டினங் கெல்லும் பழிநாட் டவளே
நீயே, எழுநிலை மாடத் திளமுலை மகளிர்
நடஞ்செயத் தரள வடந்தெறு நகரோய்
இவளே, கடம்பெறு கரிக்குல மடங்கல் புக்ககழத்
தெறித்திடு முத்தந் திரட்டுவைப் பினளே
25
  நீயே, அணிகெழு நவமணி யலரெனத் தொடுத்த
பொற்கொடித் தேர்மிசைப் பொலிகுவை யன்றே
இவளே, மணிவாய்க் கிள்ளை துணியா தகற்ற
நெட்டித ணேறு மிப்புனத் தினளே
யாதலிற் பெரும்புக ழணைகுதி யாயி
  னாரணன் படரத் தேவர்கெட் டோட
வளிசுழல் விசம்பின் கிளர்முக டணவிக்