30
|
|
கருமுகில் வளைந்து பெருகிய போல
நிலைகெடப் பரந்த கடல்கெழு விடத்தை
மறித்தவ ருயிர்பெறக் குறித்துண் டருளித் |
|
|
திருக்களங்
கறுத்த வருட்பெறு நாயகன்
கூடல் கூடினர் போல
நாட னீயிவள் கழைத்தோ ணசையே. |
(உரை)
கைகோள் : களவு. தோழிகூற்று
துறை: குலமுறை
கூறி மறுத்தல்.
(இ
- ம்.) இதற்கு "நாற்றமும் தோற்றமும்" (தொல், களவி. 23) எனவரும்
நூற்பாவின்கண் 'குறையுறற்கு எதிரிய கிழவனை மறையுறப் பெருமையிற் பெயர்ப்பினும்' எனவரும்
விதிகொள்க.
1
- 9: பெருமறை . . . . . . . . . . நீயே
(இ-ள்)
நீயே - பெருந்தகாய்! நீயோவெனில்; பெருமறை நூல் பெறு கோல்முறை புரக்கும் - பெரிய
வேதத்தினின்றும் பிறந்த மனுநூல் விதிவழியே பெற்ற செங்கோல் முறையினைப் பாதுகாக்கும்;
பொருந்தகை வேந்தன் அருங்குணம் போல- பெருந்தன்மையையுடைய மனன்னுடைய பெறற்கரிய நற்குணம்
போன்று; மணந்தோர்க்கு அமுதும் - நின்னைக் கூடியவர்க்கு அமிழ்தத்தையும்; தணந்தோர்க்கு
எரியும் - பிரிந்தவர்களுக்கு நெருப்பினையும்; புக்குழி புக்குழி புலன்பெற கொடுக்கும்-
அவரவர் சென்ற சென்ற இடங்களிலே பிலப்பட வழங்காநின்ற; மலையத் தமிழ்க்கால்-
பொதியமலையினின்றும் வருகின்ற செந்தமிழ்த் தென்றல்; வாவியுள் புகுந்து- நீர்நிலைகளிலே
படிந்து; புல்இதழ் தாமரை புதுமுகை அவிழ்ப்ப - புறவிதழையுடைய தாமரையின் நாளரும்புகளை
மலர்த்துதலாலே; வண்டு இனம் படிந்து மது கவர்ந்து உண்டு - வண்டுக் கூட்டங்கள் மொய்த்துத்
தேனைக் கவர்ந்து பருகி; சேய் இதழ் குவளையின் - சிவந்த இதழ்களையுடைய குவளை மலர்களிடத்தே;
நிரை நிரை உறங்கும் - வரிசை வரிசையாகத் துயில்தற் கிடனான; நீர்நிலை நாடன் -
தநீர் நிலையுதலையுடைய மருதநிலத் தோன்றல் ஆகுவை என்க.
(வி-ம்.)
மறை - வேதம். நூல் - மனுநூல். கோல்முறை - செங்கோல் முறை. பெருந்தகை வேந்தன் நட்டோர்க்கு
இன்பமும் பகைவர்க்குத் துன்பமும் செய்யுமாறுபோலத் தமிழ்த் தென்றல் மணந்தோர்க்கு
அமுதும் தணந்தோர்க்கு எரியும் வழங்கும் என்பது கருத்
|