பக்கம் எண் :

396கல்லாடம்[செய்யுள்51]



30
  கருமுகில் வளைந்து பெருகிய போல
நிலைகெடப் பரந்த கடல்கெழு விடத்தை
மறித்தவ ருயிர்பெறக் குறித்துண் டருளித்
  திருக்களங் கறுத்த வருட்பெறு நாயகன்
கூடல் கூடினர் போல
நாட னீயிவள் கழைத்தோ ணசையே.

(உரை)
கைகோள் : களவு. தோழிகூற்று

துறை: குலமுறை கூறி மறுத்தல்.

     (இ - ம்.) இதற்கு "நாற்றமும் தோற்றமும்" (தொல், களவி. 23) எனவரும் நூற்பாவின்கண் 'குறையுறற்கு எதிரிய கிழவனை மறையுறப் பெருமையிற் பெயர்ப்பினும்' எனவரும் விதிகொள்க.

1 - 9: பெருமறை . . . . . . . . . . நீயே

     (இ-ள்) நீயே - பெருந்தகாய்! நீயோவெனில்; பெருமறை நூல் பெறு கோல்முறை புரக்கும் - பெரிய வேதத்தினின்றும் பிறந்த மனுநூல் விதிவழியே பெற்ற செங்கோல் முறையினைப் பாதுகாக்கும்; பொருந்தகை வேந்தன் அருங்குணம் போல- பெருந்தன்மையையுடைய மனன்னுடைய பெறற்கரிய நற்குணம் போன்று; மணந்தோர்க்கு அமுதும் - நின்னைக் கூடியவர்க்கு அமிழ்தத்தையும்; தணந்தோர்க்கு எரியும் - பிரிந்தவர்களுக்கு நெருப்பினையும்; புக்குழி புக்குழி புலன்பெற கொடுக்கும்- அவரவர் சென்ற சென்ற இடங்களிலே பிலப்பட வழங்காநின்ற; மலையத் தமிழ்க்கால்- பொதியமலையினின்றும் வருகின்ற செந்தமிழ்த் தென்றல்; வாவியுள் புகுந்து- நீர்நிலைகளிலே படிந்து; புல்இதழ் தாமரை புதுமுகை அவிழ்ப்ப - புறவிதழையுடைய தாமரையின் நாளரும்புகளை மலர்த்துதலாலே; வண்டு இனம் படிந்து மது கவர்ந்து உண்டு - வண்டுக் கூட்டங்கள் மொய்த்துத் தேனைக் கவர்ந்து பருகி; சேய் இதழ் குவளையின் - சிவந்த இதழ்களையுடைய குவளை மலர்களிடத்தே; நிரை நிரை உறங்கும் - வரிசை வரிசையாகத் துயில்தற் கிடனான; நீர்நிலை நாடன் - தநீர் நிலையுதலையுடைய மருதநிலத் தோன்றல் ஆகுவை என்க.

     (வி-ம்.) மறை - வேதம். நூல் - மனுநூல். கோல்முறை - செங்கோல் முறை. பெருந்தகை வேந்தன் நட்டோர்க்கு இன்பமும் பகைவர்க்குத் துன்பமும் செய்யுமாறுபோலத் தமிழ்த் தென்றல் மணந்தோர்க்கு அமுதும் தணந்தோர்க்கு எரியும் வழங்கும் என்பது கருத்