தலைப்பட்டுக் கொணர்ந்து,
பொருளதிகாரம் வல்லாரை எங்குந் தலைப்பட்டிலேம் என்று வந்தார். வர அரசனும் புடை
படைக்கவன்று, எனவரும் இறையனார் களவியலுரையானும் உணர்க. மாறன்-பாண்டியன். புலவர்-கடைச்சங்கப்
புலவர்.
12
- 16: முந்நூறு........................................கடவுள்
(இ-ள்)
கடல் அமுது எடுத்து கரையில் வைத்தது போல்-திருப்பாற் கடலைக் கடைந்து அதன்கணமைந்த
அமிழ்தத்தைத் திரட்டி எடுத்துத்தேவர்கள் எளிதில் உண்ணும்படி கரையிடத்தே வைத்தாற்போன்று;
முந்துறும் பெருமறை முளைத்து அருள்வாக்கால்-எல்லா நூலுக்கும் முந்திய பெரிய வேதங்கள்
தோன்றுதற்கிடனான அருள் நிரம்பிய மொழியினாலே: பரப்பு இன்சுவை தமிழ்-பரப்பும்
இனிய சுவையுமுடைய தமிழாகிய கடலினின்றும்; அன்பினைந்திணை
என்று-அன்பினைந்திணை என்று தொடங்கி; அறுபது சூத்திரம் திரட்டி-அறுபது சூத்திரமாகிய
அமிழ்தத்தைத் தொகுத்து; மற்று அவர்க்கு-அப்பாண்டிய மன்னனுக்கும் சங்கப் புலவர்களுக்கும்;
தெளிதரக் கொடுத்த-பொருளியலை நன்கு தெளிந்து கொள்ளும்படி வழங்கியருளிய; தென் தமிழ்க்
கடவுள்-தென் தமிழின் நூலாசிரியனாகிய இறைவனும் என்க.
(வி-ம்.) கடல்-திருப்பாற்
கடல். இது பரப்புடைய இனிய தமிழ் மொழிக்குவமை. அமிழ்தம் இறையனார் அகப்பொரு நூலுக்
குவமை. எல்லா நூல்களுக்கும் முந்திய பெரிய வேதங்கள் என்க. தமிழ்க் கடவுள்-தமிழ்
நூலாசிரியனாகிய இறைவன். இறைவன் அகப்பொருள் இலக்கணம் செய்தருளிய வரலாற்றினை,
மதுரை ஆலவாயில் அழல் நிறக்கடவுள் சிந்திபான்: என்னை பாவம்! அரசற்குக் கவற்சி
பெரிதாயிற்று; அதுதானும் ஞானத்திடையதாகலான், யாம் அதனைத் தீர்கற் பாலம் என்று
இவ்வறுபது சூத்திரத்தையுஞ் செய்து மூன்று செப்பிதழகத்து எழுதிப் பீடத்தின் கீழிட்டான்
(இறையனார் அகப்பொருள். களவு. சூத்திரம். 1. உரை) எனவரும் களவியலுரைப் பகுதியானுணர்க.
17
- 18: தழல்....................................கிளை
(இ-ள்)
தழல்கண் தரக்கின் சரும ஆடையன்-தீயை யொத்த கண்ணையுடைய புலியினது தோலாகிய ஆடையை
யுடையவனும் ஆகிய சோமசுந்தரக் கடவுள் எழுந்தருளியுள்ள: கூடல் அம்பெரும்பதி கூறார் கிளைஎன்-நான்மாடக்
கூடலாகிய பெரிய அழகிய மதுரை மாநகரத்தைப் புகழ்ந்து வாழ்த்தாத மடவோருடைய சுற்றத்தார்
வருந்துதல் போன்று வருந்துவதற்கு என்க.
(வி-ம்.)
தழல்போன்ற கண்ணையுடைய தரக்கு என்க. தரக்கு-புலி. (சூ. நிகண். 3: 3). கூறார்-புகழ்ந்து
வாழ்த்தாத மடவோர். கிளை வருந்துதல் போன்று வருந்துதற்கு என விரித்துக் கொள்க.
|