பக்கம் எண் :

456கல்லாடம்[செய்யுள்61]



 
 

செய்யுள் 61

நேரிசையாசிரியப்பா

 
   
5
  ஏழ்கடல் வளைந்த பெருங்கட னாப்பண்
பத்துடை நூறு பொற்பமர் பரப்பு
மாயிரத் திரட்டிக் கீழ்மே னிலையும்
யோசனை யடுத்த மாசறு காட்சிப்
பளிங்கப் பொருப்பிற் றிடர்கொண் மூதூர்
10
  களவுடை வாழ்க்கை யுளமனக் கொடியோன்
படர்மலை யேழுங் குருகமர் பொருப்பு
மாவெனக் கவிழ்ந்த மறிகட லொன்றுங்
கடுங்கனற் பூமி படும்படி நோக்கிய
தாரையெட் டுடைய கூரிலே நெடுவேற்
15
  காற்படைக் கொடியினன் கருணையோ டமர்ந்த
புண்ணியக் குன்றம் புடைபொலி கூடற்
பிறைச்சடை முடியினன் பேரரு ளடியவர்க்
கொருகாற் றவறா வுடைமைத் தென்னப்
பிரியாக் கற்பெனு நிறையுடன் வளர்ந்த
20
  நெடுங்கய லெறிவிழிக் குறுந்தொடித் திருவின
டெய்வமென் றொருகாற் றெளியவு முளத்திலள்
பலவுயிர் தழைக்க வொருகுடை நிழற்று
மிருபுல வேந்தர் மறுபுலப் பெரும்பகை
நீர்வடுப் பொருவ நிறுத்திடப் படரினு
25
  மேழுய ரிரட்டி மதலைநட் டமைத்த
தன்பழங் கூடந் தனிநிலை யன்றி
யுடுநிறை வானப் பெருமுக டுயரச்
செய்யுமோர் கூடம் புணர்த்தி
னெய்ம்மிதி யுண்ணா தவன்வடக் களிறே.

(உரை)
கைகோள்: கற்பு; செவிலி கூற்று.

துறை: கற்புப் பயப்புரைத்தல்.

     (இ-ம்.) இதனை, "கழிவினும் வரவினும்" (தொல்.கற்பி.) எனவரும் நூற்பாவின்கண் 'செவிலிக்குரிய ஆகும்' என்னும் மிகையாற் கொள்க.