1
- 5: ஏழ்கடல்........................ மூதூர்
(இ-ள்) ஏழ்கடல் வளைந்த பெருங்கடல் நாப்பண் - ஏழு கடல்களையும் அகத்திட்டு வளைந்த பெரும்புறக் கடல் நடுவில்; பத்து உடைநூறு யோசனை பொற்பு அமர் பரப்பும் - ஆயிரம் யோசனை அளவுள்ள அழகமைந்த அகலமும்; ஆயிரத்து இரட்டி கீழ்மேல் நிலையும் - இரண்டாயிரம் யோசனை அளவுள்ள கீழ்நிலையும் மேல்நிலையும்; அடுத்த மாசு அறு காட்சி-பொருந்திய குற்றமற்ற தோற்றத்தினையுடைய; பளிங்கு அ பொருப்பின் திடர்பொள் மூதூர் - பளிங்காலியன்ற அழகிய மலைபோலும் உயர்ச்சிகொண்ட மகேந்திர மென்னும் பழைய நகரிடத்தே என்க,
(வி-ம்.) பெருங்கடல் நாப்பண் திடர்கொள் மூதூர் என்க. ஏழ்கடலாவன உப்புக்கடல், நல்ல தண்ணீர்க் கடல், பாற்கடல், தயிர்க்கடல், நெய்க்கடல், கருப்பஞ்சாற்றுக் கடல், தேன் கடல் என்பன. பொற்பு-அழகு. பளிங்கு அ பொருப்பு என கண்ணழித்துக் கொள்க. அ-அழகு. பொருப்பு - மலை. மூதூர்-பழைதாகிய ஊர்.
6 - 12: கனவு .......................... கூடல்
(இ-ள்) களவுடை வாழ்க்கை உளமனக் கொடியோன் - வஞ்சக வாழக்கையுள்ள கொடிய நெஞ்சினையுடையோனுடைய; படர்மலை ஏழும் - அகன்றுள்ள ஏழு மலைகளும்; குருகு அமர் பொருப்பும் - கிரவுஞ்சம் என்னும் பறவை போன்ற வடிவையுடைய மலையும்; மா எனக் கவிழ்ந்த மறிகடல் ஒன்றும் - மாமரமாகத் தலைகீழாக இருந்த அலைகளை மறிததெறியா நின்ற கடல் ஒன்றும்; கடுங்கனல் பூழிபடும்படி நோக்கிய - கொடிய தீப்பொறிகள் ஆகும்படி சினந்து பார்த்த; தாரை எட்டு உடைய எட்டுக் கண்களையுடைய; கூர்இலை நெடுவேல் -கூரிய இலைத்தொழிலமைந்த நெடிய வேலை ஏந்திய; கால் படை கொடியினன் கோழிக் கொடியை உய்ர்ததவனாகிய முருகப்பெருமான்; கருணையோடு அமர்ந்த புண்ணியக் குன்றம் - அருளோடு எழுந்தருளுதற்குக் காரணமான அறத்தினையுடைய திருப்பரங்குன்றம்; புடைபொலி கூடல் - பக்கத்தில் அழகு பெற்றிருக்கின்ற மதுரையில் எழுந்தருளியுள்ள என்க.
(வி-ம்.) களவு - வஞ்சகம். குருகமர் பொருப்பு - கிரவுஞ்சமலை. அக்கொடியோன் மாஎனக் கவிழ்ந்திருத்தற் கிடனான மறிகடல் ஒன்றும் என்க. கடுங்கனற் பூழி - கடிய தீப்பொறி. தாரை - கண். காற்படை - காலின்கண் உள்ள முள்ளையே படைக்கலமாக உடைய கோழி. அமர்ந்த புண்ணியம் - அமர்த்ற்குக் காரணமான புண்ணியம்.
13 - 17: பிறைச் ................................ உளத்திலள்
(இ-ள்) பிறை சடைமுடியினன் பேர் அருள் அடியவர்க்கு - பிறையை யணிந்த சிவபெருமானுடைய பேரருளைப்
|