பக்கம் எண் :

48கல்லாடம்[செய்யுள்4]



  பிறைமதி யன்ன கொடுமரம் வாங்கித்
20
  தோகையர் கண்ணெனச் சுடுசரந் துரக்கும்
எம்முடைக் குன்றவர் தம்மனம் புகுதவிப்
புனகுடிக் கணியர்தம் மலர்க்கையே டவிழ்த்து
வரிப்புற வணில்வாற் கருத்தினை வளைகுரல்
கொய்யுன், காலமு நாள்பெறக் குறித்து
25
  நிலழுங் கொடுத்தவ ரீன்ற
மழலை மகார்க்கும் பொன்னணி தற்கே.

(உரை)
கைகோள், களவு. தோழிக்கூற்று

துறை: பிரிவருமை கூறல்
(இ-ம்.) இதுவுமது.

     (இ-ள்) உழையினம்-மானினங்காள்; எம்பெறும் படிறு-எம்முடைய பெரிய குற்றத்தை; இன்று இயம்ப இப்பொழுது யாங்கள் நும்பாற்சொல்ல; சிறிது நின்று கேண்மின்-சிறிது பொழுது நின்று கேளுங்கள்! என்க.

     (வி-ம்.) தலைவன் சிறைப்புறத்தே வந்து நிற்றலை அறிந்த தோழி அவன் வரவறியாள் போன்று மான்களுக்குக் கூறுவாள்போல் அவன் கேட்பக் கூறத் தொடங்குபவள் அவற்றை விளித்துக் கூறுகின்றாள். படிறு-குற்றம். பெரும்படிறு சிறிது நின்றியம்ப என்புழிச் செய்யுளின்ப முணர்க. உழையினம்: விளி; மானினம். இன்று இயம்ப என மாறிக் கூட்டுக. பொறுமையுடன் நின்று கேளுங்கள் என்பாள் சிறிது நின்று கேண்மின் என்றாள்.

1 - 4: அண்டம்.......................................தன்னால்

     (இ-ள்) அண்டம் ஈன்று அளித்த கன்னி-எண்ணிறந்த அண்டங்கலையும் படைத்து அவற்றின்கண் வாழும் உயிர்களையும் பாதுகாத்த கன்னிகையாகிய உமாதேவியார்; முனிவு ஆக-சினங்கொண்டாராக; அக்குறிப்பறிந்து; திருநுதல் முளைத்த கனல் தெறு நோக்கினில்-தன்னுடைய அழகிய நுதலின்கண் தோன்றிய நெருப்பாகச் சுடா நுன்ற கண்ணினால்; மணிக்கரத்து அமைந்த ஆஇரம் வான்படையுடன்-அழகிய கையிலே அமைக்கப்பட்ட எண்ணிறந்த சிறந்த படைக்கலன்களோடே; சயம் பெறுவீரனைத்தந்து அவன் தன்னால்-வெற்றி பெறுமியல்யுடைய வீரபத்திரனைப் படைத்தருளிய அவனாலே என்க.