(வி-ம்.) அண்டம்-உலகங்கள்.
அளித்த-பாதுகாத்த. கன்னி-என்றும் இளமை நீங்காத உமையம்மையார். முனிவு-சினம். நுதல்-நெற்றி.
தெறு நோக்கு-சுடும் கண். ஆயிரம் என்றது எண்ணிறந்த என்றபடி. வான்-சிறந்த. சயம்-வெற்றி.
வீரனை-வீரபத்திரனை. தந்து-படைத்தருளி.
5
- 10: உள்ளத்து..................................சாரன்
(இ-ள்) உள்ளத்து
அருளும் தெய்வமும் விடுத்த-தன் நெஞ்சத்தே அருளுடைமையும் தெய்வம் உண்டு என்னும் எண்ணத்தையும்
துவரநீக்கிய; அடுள்மனத் தக்கன்-அறியாமையையுடைய மனத்தையுடைய தக்கன் என்பான் செருக்கினால்
தொடங்கிய; பெருமகம் உண்ணப்புக்க தேவினர்தம்-பெரிய வேல்வியின்கண் அவியுண்ணப்
புகுந்த நான்முகன் இந்திரன் முதலிய தேவர்களுடைய; பொருகடல் படையினை-போர் செய்தற்குக்
காரணமான கடல்போன்ற பெரியபடைகளை; ஆரியவூமன் கனவு என ஆக்கிய-ஆரிய வூமன்கண்ட கனவைப்
போன்று வெளிப்படாமற் செய்த; கூடல் பெருமான்-மதுரையில் எழுந்தருளியுள்ள சிவபெருமானுடைய;
பொதியப் பொருப்பு அகத்து-பொதியமலையின்கண் அமைந்த; அருவி அம்சாரல்-அருவிகளையுடைய
அழகிய சாரலின்கண் என்க.
(வி-ம்.) அருள்-எல்லாவுயிர்களிடத்தும்
பரந்துபட்டுச் செல்லும் பேரன்பு. தெய்வம் உண்டு என்னும் நினைவு என்க. இருள்-அறியாமை.
மகம்-வேள்வி. உண்ண-அவியுண்ண என்க. தேவினர்-நான்முகன் முதலியோர். பொருகடற்படை:
வினைத்தொகை. ஆரியவூமன்-ஆரியனாகிய வூமங் ஊமன் கனவென அரியவாக்கிய எனக் கூறிக்
குறுக்கல்விகாரம் என்பாரும் உளர். ஊமன்கண்ட கனவு வெளிப்படாததுபோலத் தேவர்படையும்
வெளிப்படாதாயற் றென்பது கருத்து. சாரல்-மலைப்பக்கம்.
10
- 15: இருவி.......................................துணிந்தனம்
(இ-ள்) இருவி-அம்புனத்திலும்-தினை
அரிந்து இருவியாக விடப்பட்ட தாளையுடைய அழகிய இத் தினைப்புனத்தின் கண்ணும்; மயிலுங்
கிளியுங் குருவியும் படிந்து-மயிலும் கிளியும் குருவியும் தமக்கு உணவில்லாதிருந்தும் பயின்று
பழகிய இடமாதலின் இவ்விடத்தினின்றும் போகாவாய் வீழ்ந்து கிடத்தலால்; நன்றி
செய்குநர்ப் பிழைத்தோர்க்கு-த்மக்கு நன்மை செய்தவர் திறத்திலே தவறு செய்தவர்க்கு
அப்பாவத்தினின்றும் னீங்குவதற்கு; உய்வுஇல-வழியில்லை; என்னும் குன்றாவாய்மை-என்று
கூறப்படும் குறையாத உண்மையை; நிலைநின்று காட்டித் தங்குவன கண்டும்-தாம் ஈண்டே தங்கி
நிலைத்தலால் எமக்கு அறிவித்துத் தங்குகின்ற அப்பறவைகளைக் கண்டு வைத்தும்; மனவலிகூடி-மனவலிமை
பெற்று; ஏகவுந்துணிந்தனம்-இப் கல்-4
|