பக்கம் எண் :

மூலமும் உரையும்515



30
  தம்முடன் மயங்கின வொடுங்கின வுறங்கின
வடங்கின வலிந்தன வயர்ந்தன கிடந்தன
35
  வெனப்பெறின் மாலை யென்னுயி ருளைப்பது
மவர்திற னிறப்பது மொருபுடை கிடக்க
வுள்ளது மொழிமோ நீயே விண்ணுழை
வந்தனை யென்னில் வருகுறி கண்டிலன்
மண்ணிடை யெனிலோ வவ்வயி னான
    கூடிரின் றனையெனிற் குறிதவ றாவாற்
றேம்படர்ந் தனனெனிற் றிசைகுறிக் குநரா
லாதலி னின்வர வெனக்கே
யோதல் வேண்டும் புலன்பெறக் குறித்தே.

(உரை)
கைகோள் : களவு. தலைவிகூற்று

துறை : பொழுதுகண்டு மயங்கல்.

     (இ-ம்.) இதற்கு, “மறைந்தவற் காண்டல்” (தொல். களவி. 20) எனவரும் நூற்பாவின்கண் ‘பொழுதும் ஆறும் புரைவது அன்மையின் அழிவு தலைவந்த சிந்தைக் கண்ணும் ’ எனவரும் விதி கொள்க.

1-4: ஆயிரம்.................................பெருகி

     (இ-ள்) ஆயிரம் பண அடவி அரவுவாய் அணைத்து - ஆயிரமாகிய படக்காட்டினையுடைய ஆதிசேடனென்னும் பாம்பினை வாயிற் கவ்விக்கொண்டு; கருமுகில் நிறத்த கண்ணனின் சிறந்து - கரிய நிறமுள்ள முகிலைப்போன்ற நிறமுள்ள கண்ணனைப் போலச் சிறப்புற்று ; நிலை உடல் அடங்க திருவிழி நிறைத்து - நிலையான தன் உடல் முழுதும் அழகிய கண்களை நிறைத்து ; தேவர் நின்று இசைக்கும் தேவனில் பெருகி - தேவர்களெல்லாம் எழுந்து நின்று வாழ்த்துதற்குக் காரணமான இந்திரனைப்போலப் பெருமை பெற்று என்க.

     (வி-ம்.) ஆதிசேடனுக்கு ஆயிரம் படங்கள் உண்மையின் ஆயிரம் பனாடவி அரவு எனப்பட்டது. பணம். படம், அடவி: உவமவாகு பெயர், அரவு-ஆதிசேடன், கண்ணன் - மோயோன், அடக்க - முழுவதும் தேவர் நின்றிகைக்கும் தேவன்- இந்திரன் - பெருகுதல் - பெருமை எய்துதல்.

5-10: குரு..................................................மயிலோன்

     (இ-ள்) குருவளர் மரகதம் பறை தழை பரப்ப - நிறம் மிகாநின்ற மரகதமணிபோலும் நிறமுடைய இறகுகளைத் தாழ