30
|
|
தம்முடன்
மயங்கின வொடுங்கின வுறங்கின
வடங்கின வலிந்தன வயர்ந்தன கிடந்தன |
35
|
|
வெனப்பெறின்
மாலை யென்னுயி ருளைப்பது
மவர்திற னிறப்பது மொருபுடை கிடக்க
வுள்ளது மொழிமோ நீயே விண்ணுழை
வந்தனை யென்னில் வருகுறி கண்டிலன்
மண்ணிடை யெனிலோ வவ்வயி னான |
|
|
கூடிரின்
றனையெனிற் குறிதவ றாவாற்
றேம்படர்ந் தனனெனிற் றிசைகுறிக் குநரா
லாதலி னின்வர வெனக்கே
யோதல் வேண்டும் புலன்பெறக் குறித்தே. |
(உரை)
கைகோள் : களவு. தலைவிகூற்று
துறை : பொழுதுகண்டு
மயங்கல்.
(இ-ம்.) இதற்கு,
மறைந்தவற் காண்டல் (தொல். களவி. 20) எனவரும் நூற்பாவின்கண் பொழுதும் ஆறும்
புரைவது அன்மையின் அழிவு தலைவந்த சிந்தைக் கண்ணும் எனவரும் விதி கொள்க.
1-4:
ஆயிரம்.................................பெருகி
(இ-ள்)
ஆயிரம் பண அடவி அரவுவாய் அணைத்து - ஆயிரமாகிய படக்காட்டினையுடைய ஆதிசேடனென்னும்
பாம்பினை வாயிற் கவ்விக்கொண்டு; கருமுகில் நிறத்த கண்ணனின் சிறந்து - கரிய நிறமுள்ள
முகிலைப்போன்ற நிறமுள்ள கண்ணனைப் போலச் சிறப்புற்று ; நிலை உடல் அடங்க திருவிழி
நிறைத்து - நிலையான தன் உடல் முழுதும் அழகிய கண்களை நிறைத்து ; தேவர் நின்று இசைக்கும்
தேவனில் பெருகி - தேவர்களெல்லாம் எழுந்து நின்று வாழ்த்துதற்குக் காரணமான இந்திரனைப்போலப்
பெருமை பெற்று என்க.
(வி-ம்.)
ஆதிசேடனுக்கு ஆயிரம் படங்கள் உண்மையின் ஆயிரம் பனாடவி அரவு எனப்பட்டது. பணம்.
படம், அடவி: உவமவாகு பெயர், அரவு-ஆதிசேடன், கண்ணன் - மோயோன், அடக்க - முழுவதும்
தேவர் நின்றிகைக்கும் தேவன்- இந்திரன் - பெருகுதல் - பெருமை எய்துதல்.
5-10:
குரு..................................................மயிலோன்
(இ-ள்)
குருவளர் மரகதம் பறை தழை பரப்ப - நிறம் மிகாநின்ற மரகதமணிபோலும் நிறமுடைய இறகுகளைத்
தாழ
|