பக்கம் எண் :

516கல்லாடம்[செய்யுள்71]



விரித்து ; மணிதிரை உகைக்கும் கடலினில் கவினி - முத்து முதலிய மணிகளை அலைகளால் ஒதுக்குகின்ற கடலைப்போல அழகெய்தி ; முள் எயிறு அரவம் முறித்து உயிர் பருகி- முட்போன்ற பற்களையுடைய பாம்புகளை அலகாற் கொத்தித் துணித்து அவற்றின் உயிர்களைக் குடித்து ; பொள் என வானத்து அசனியின் பொலிந்து-ஞெரேலென்று வானத்தின் கண்ணதாகிய இடி முழக்கம்போல முழங்கி ; பூதம் ஐந்து உடையும் காலக் கடையினும் - நிலம் முதலிய ஐம்பெரும் பூதங்களும் அழிதற்குக் காரணமான ஊழி இறுதிக்காலத்தினும் அழியாமல் ; உடல்தழை ‘நிலைத்த மறம் மிகு மயிலோன் - உடல் தளிர்த்து நிலைபெற்ற வலிமை மிக்க மயிலை ஊர்தியாக உடையவனும் என்க.

     (வி-ம்.) குரு - நிறம், மரகதம் போலும் பறை என்க. பறை - இறகு, தழையைப் பரப்பி எனல் வேண்டிய வினையெச்சத் தீறுகெட்டது எயிறு - பல், முறித்தல் - துணித்தல், உயிர் பருகி என்றது . கொன்று என்றவாறு, பூதம் ஐந்தும் எனல் வேண்டிய முற்றும்மை தொக்கது. பூதம் ஐந்தாவன நிலம், நீர், வளி, தீ வெளி என்பன. கடைக்காலம் என்பது காலக்கடை என மாறி நின்றது. மயிலோன்-மயிலை ஊர்தியாக உடையவன்.

11-15: புரந்தரன்.........................................காதலர்

     (இ-ள்) புரந்தரன் புதல்வி-இந்திரன் மகளாகிய தெய்வயானை நாய்ச்சியாரும் ; எயினர் தம் பாவை - வேடர் மகளாகிய வள்ளி நாய்ச்சியாரும்; இருபால் இலங்க - தன் இண்டு பக்கங்களினும் விளங்காநிற்ப; உலகு பெற நிறைந்த அருவி அம குன்றத்து - உலகிலுள்ள அடியால் தாம் தரம் வேண்டிய வரங்களைப் பெற்றுக் கொள்ளற்பொருட்டு நிறைந்தெழுந்தருளிய அருவி நீரினையுடைய திருப்பரங்குன்றத்தை; அணி அணி கூடல்-தனக்கு அணிகலனாக அணிந்துள்ள நான்மாடக்வடல் என்னும் திருப்பகுதிக்கு; இறைவன் - கடவுளும்; பிறையவன்- பிறையை அணிந்தவனும் ; கறைகெழு மிடற்றேனான் - கறுநிறம் அமைந்த மிடற்றினையுடையவனும் ஆகிய சிவபெருமானுடைய ; மலர்க் கழல் வழுத்தும் நம் காதலர் . செந்தாமரைமலர் போன்ற வீரக் கழலணிந்த திருவடிகளை இடையறாது நினைந்து வாழ்த்துகின்ற நம் பெருமான் என்க.

     (வி-ம்.) புரந்தரன் - இந்திரன், எயினர் - வேடர், எயினர் பாவை - வள்ளி, தெய்வயானையும் வள்ளியும் இருபுடையினும் இலங்க எழுந்தருளிய குன்றம் என்க. உலகு: ஆகு பெயர்; உலகில் வாழும் அடியார் என்க. அடியார் திருப்பரங்குன்றத்தே எழுந்தருளிய இறைவன்பான் தாம் வேண்டும் வரங்களைப் பெறுவர் என்பதனை.