(உரை)
கைகோள், களவு, தோழி கூற்று
துறை: சேட்படை
(இ-ம்.)
இதற்கு நாற்றமும் தோற்றமும் (தொல். கள. 23) எனவரும் சூத்திரத்தின்கண் பேதமை
யூட்டலும் என வரும் விதிகொள்க.
33
: மொழி..............................வேலோயே
(இ-ள்) குறிமொழி-குறித்தசொல்லும்;
கூடா-விரைவினாலே கூடப்படாத; செவ்வேலோய்-குருதியாற் சிவந்த வேலினையுடையோய் என்க.
(வி-ம்.) குறிமொழி
என மாறுக. குறித்தசொல் முடிவதற்கு முன் பகைவர்மேற் பாய்ந்து கொல்லும் வேல் என்பது
கருத்து. அஃதாவது, ஒருவனைச் சுட்டி இவனைக் கொல் என்று சொல்லும் ஏவல்மொழி மிடியுமுன்
கொல்லும் வேல் என்றவாறு.
15
: பொன்.......................கடுப்ப
(இ-ள்) இரணியம்
என்பது பொன்னின் பெயராதலின் இரணியன் பொன்பெயர் உடையோன் எனப்பட்டான். தன்
எனது திருமாலை. கடுப்ப-சினப்ப. அஃதாவது தன்மகனாகிய பிரகலாதன் நாராயணன் என்று கூறக்கேட்ட
பொழுத் வெகுண்டான் என்பது கருத்து. தன்பெயர் கொடுப்ப உன்றும் பாடம். இதற்கு இரணியன்
இறைவன் திருப்பெயர் ஓதுவதற்கு மாறாகத் தன் பெயரை ஓதும்படி கற்பிக்க என்க.
1
- 4: இரண்டு..........................................இன்றி
(இ-ள்) இரண்டு உடல்
ஒன்றாய்-தாயும் தந்தையுமாகிய இருவருடைய உடலும் புணர்ச்சியின்கண் ஓருடலாகி; கரைந்து
கண்படாமல்-இன்பத்தால் உளமுருகிக் கண்முதலிய பொறிகளினது நுகர்ச்சியுண்டாகாமலும்;
அளவியல் மனநிலை பரப்பும் காலம்-அளவானியன்ற கூட்டமும் இன்ப நிலையும் உண்டாக்கும்
காலமாகிய; தளைகரை கடந்த காமக் கடலுள்-தடைசெய்யும் கரையைக் கடந்த காமமாகிய கடலினுள்;
புல்நுனி பனியென மன்னுதல் இன்றி-புல்லினது நுனியின்கண் வீழ்ந்த பனித்துளியினது அளவாய்க்
கருப்பையில் தங்குதல் இன்றியும் என்க.
|