பக்கம் எண் :

54கல்லாடம்[செய்யுள்5]



(உரை)
கைகோள், களவு, தோழி கூற்று

துறை: சேட்படை

     (இ-ம்.) இதற்கு “நாற்றமும் தோற்றமும்” (தொல். கள. 23) எனவரும் சூத்திரத்தின்கண் ‘பேதமை யூட்டலும்’ என வரும் விதிகொள்க.

33 : மொழி..............................வேலோயே

     (இ-ள்) குறிமொழி-குறித்தசொல்லும்; கூடா-விரைவினாலே கூடப்படாத; செவ்வேலோய்-குருதியாற் சிவந்த வேலினையுடையோய் என்க.

(வி-ம்.) குறிமொழி என மாறுக. குறித்தசொல் முடிவதற்கு முன் பகைவர்மேற் பாய்ந்து கொல்லும் வேல் என்பது கருத்து. அஃதாவது, ஒருவனைச் சுட்டி இவனைக் கொல் என்று சொல்லும் ஏவல்மொழி மிடியுமுன் கொல்லும் வேல் என்றவாறு.

15 : பொன்.......................கடுப்ப

     (இ-ள்) இரணியம் என்பது பொன்னின் பெயராதலின் இரணியன் பொன்பெயர் உடையோன் எனப்பட்டான். தன் எனது திருமாலை. கடுப்ப-சினப்ப. அஃதாவது தன்மகனாகிய பிரகலாதன் நாராயணன் என்று கூறக்கேட்ட பொழுத் வெகுண்டான் என்பது கருத்து. தன்பெயர் கொடுப்ப உன்றும் பாடம். இதற்கு இரணியன் இறைவன் திருப்பெயர் ஓதுவதற்கு மாறாகத் தன் பெயரை ஓதும்படி கற்பிக்க என்க.

1 - 4: இரண்டு..........................................இன்றி

     (இ-ள்) இரண்டு உடல் ஒன்றாய்-தாயும் தந்தையுமாகிய இருவருடைய உடலும் புணர்ச்சியின்கண் ஓருடலாகி; கரைந்து கண்படாமல்-இன்பத்தால் உளமுருகிக் கண்முதலிய பொறிகளினது நுகர்ச்சியுண்டாகாமலும்; அளவியல் மனநிலை பரப்பும் காலம்-அளவானியன்ற கூட்டமும் இன்ப நிலையும் உண்டாக்கும் காலமாகிய; தளைகரை கடந்த காமக் கடலுள்-தடைசெய்யும் கரையைக் கடந்த காமமாகிய கடலினுள்; புல்நுனி பனியென மன்னுதல் இன்றி-புல்லினது நுனியின்கண் வீழ்ந்த பனித்துளியினது அளவாய்க் கருப்பையில் தங்குதல் இன்றியும் என்க.