பக்கம் எண் :

574கல்லாடம்[செய்யுள்81]



30
  முள்ளுதோ றுள்ளதோ றுணாவமு துறைக்குந்
திருமுத் தமிழும் பெருகுதென் மலயத்
தாரப் பொதும்ப ரடைகுளிர் சாரற்
சுரும்புடன் விரிந்த துணர்மலர்க் கொடியே
35
  விண்விரித் தொடுக்கு மிரவிவண் கவிகைக்
கிட்டுறை காம்பென விட்டெழு காம்பே
மரகதஞ் சினைத்த சிறைமயில் குலமே
நீலப் போதும் பேதமையும் விழித்த
பொறியுட லுழையே யெறிபுன மணியே
40
  பாசிழைப் பட்டு நூற்கழி பரப்பிய
கிளைவாய்க் கிடைத்த வளைவாய்க் கிளியே
மைந்தர்கண் சென்று மாதருட் டடைந்த
பொழிமதுப் புதுமலர்ப் போக்குடைச் சுரும்பே
வெறிமுதிர் செம்மன் முறிமுகங் கொடுக்குஞ்
45
  சந்தனப் பொதும்பர்த் தழைசினைப் பொழிலே
கொள்ளையஞ் சுகமுங் குருவியுங் கடிய
விருகாற் கவணிற் கெரிமணி சுமந்த
நெடுங்காற் குற்றுழி நிழல்வைப் பிதணே
நெருநற் கண்டவெற் குதவிய வின்ப
50
  மிற்றையிற் கரந்த விருண்மன மென்னே
விவணிற் கவைத்த வேலாக் கடுங்கண்
கொடுத்துண் டவர்பின் கரந்தமை கடுக்கு
மீங்கிவை கிடக்க வென்னிழ லிரும்புனத்
திருந்தோ ளிருந்தே னிலதா னீரு
  நின்புன மல்லவின் றென்புலன் வெளிப்பட
வறைதல் வேண்டு மப்புன நீரேன்
முன்னங் கண்டவ னன்றென்
றுன்னா வுதவுத லுயர்ந்தோர் கடனே.

(உரை)
கைகோள்: களவு. தலைவன் கூற்று.

துறை: வறும்புனங்கண்டு வருந்தல்.

     (இ-ம்) இதற்கு, “பண்பிற் பெயர்ப்பினும்” (தொல். களவி. 12) எனவரும் நூற்பாவின்கண் பரிவுற்று மெலியினும் எனவரும் விதிகொள்க.