30
|
|
முள்ளுதோ
றுள்ளதோ றுணாவமு துறைக்குந்
திருமுத் தமிழும் பெருகுதென் மலயத்
தாரப் பொதும்ப ரடைகுளிர் சாரற்
சுரும்புடன் விரிந்த துணர்மலர்க் கொடியே |
35
|
|
விண்விரித்
தொடுக்கு மிரவிவண் கவிகைக்
கிட்டுறை காம்பென விட்டெழு காம்பே
மரகதஞ் சினைத்த சிறைமயில் குலமே
நீலப் போதும் பேதமையும் விழித்த
பொறியுட லுழையே யெறிபுன மணியே |
40
|
|
பாசிழைப்
பட்டு நூற்கழி பரப்பிய
கிளைவாய்க் கிடைத்த வளைவாய்க் கிளியே
மைந்தர்கண் சென்று மாதருட் டடைந்த
பொழிமதுப் புதுமலர்ப் போக்குடைச் சுரும்பே
வெறிமுதிர் செம்மன் முறிமுகங் கொடுக்குஞ் |
45
|
|
சந்தனப் பொதும்பர்த் தழைசினைப் பொழிலே
கொள்ளையஞ் சுகமுங் குருவியுங் கடிய
விருகாற் கவணிற் கெரிமணி சுமந்த
நெடுங்காற் குற்றுழி நிழல்வைப் பிதணே
நெருநற் கண்டவெற் குதவிய வின்ப |
50
|
|
மிற்றையிற்
கரந்த விருண்மன மென்னே
விவணிற் கவைத்த வேலாக் கடுங்கண்
கொடுத்துண் டவர்பின் கரந்தமை கடுக்கு
மீங்கிவை கிடக்க வென்னிழ லிரும்புனத்
திருந்தோ ளிருந்தே னிலதா னீரு |
|
|
நின்புன
மல்லவின் றென்புலன் வெளிப்பட
வறைதல் வேண்டு மப்புன நீரேன்
முன்னங் கண்டவ னன்றென்
றுன்னா வுதவுத லுயர்ந்தோர் கடனே. |
(உரை)
கைகோள்: களவு. தலைவன் கூற்று.
துறை: வறும்புனங்கண்டு
வருந்தல்.
(இ-ம்)
இதற்கு, பண்பிற் பெயர்ப்பினும் (தொல். களவி. 12) எனவரும் நூற்பாவின்கண்
பரிவுற்று மெலியினும் எனவரும் விதிகொள்க.
|