நிற்கும், ஆதலால் தலைவன்
பரத்தமையிற் பிரிந்தமையால் தனித்திருத்தலின் அதனைத் தமக்குவமையாக்கினாள். மெய்ப்பாடு-அழுகை.
பயன்-அவாவுயிர்த்தல்.
|
|
செய்யுள்
91
நேரிசையாசிரியப்பா
|
|
|
|
5
|
|
வாய்வலங்
கொண்ட வயிற்றெழு தழலுக்
காற்றா தலைந்து காற்றெனக் கொட்புற்
றுடைதிரை யருவி யொளிமணி காலுஞ்
சேயோன் குன்றகத் திருப்பெறு கூடற்
கொழுஞ்சுடர் கிளைத்தல் நெடுஞ்சடைப் புயங்கன் |
10
|
|
பவளந்
தழைத்த பதமலர் சுமந்தநம்
பொருபுன லூரனைப் பொதுவென வமைத்த
வக்கடி குடிமனை யவர்மனை புகுத்தி
யறுவாய் நிறைந்த மதிப்புறத் தோவெனச்
சுரைதலை கிடைத்த விசையுளர் தண்டெடுத் |
15
|
|
தளிதார்
பாடுங் குரனீர் வறந்த
மலைப்புட் போல நிலைக்குர லணந்தாங்
குணவுளங் கருதி யொளியிசை பாட
முட்டாண் மறுத்த முண்டகந் தலையமைத்
தொருபா லணைந்தவிவ் வுயர்மதிப் பாணற் |
|
|
கடுத்தனை
யுதவ வேண்டுங்
கடுத்திகழ் கண்ணியக் கல்லையிக் கணமே. |
(உரை)
கைகோள்: கற்பு. தலைவி கூற்று.
(இதுவும்
கோவையார்ச் செய்யுளுக்குக் கூற்றுவகையால் மாறுபட்டிருத்தல் உணர்க.)
துறை: பாணன்
வரவுரைத்தல்.
(இ-ம்.)
இதற்கு, அவனறிவு ஆற்ற அறியும் (தொல். கற்பி. 6) எனவரும் நூற்பாவின்கண், வாயிலின்
வரும் வகை என்னும் விதி கொள்க.
3
- 10: உடைதிரை......................எடுத்து
(இ-ள்)
உடைதிரை யருவி ஒளி மணி காலும் சேயோன் குன்று அகம்-சிதறி வீழ்கின்ற அலைகளையுடைய
அருவிநீர்
|