|
|
|
நெடுந்தாட்
குற்றிலை வாகைநெற் றொலிப்ப
திசைநின் றெழாது தழன்முகந் தேறிச் |
|
30
|
|
சுடலையிற்
சூறை யிடையிடை யடிக்கும்
பேரழற் காணினு காடுமென் னுளத்தினு
மொருபாற் பசுங்கொடி நிறைபாட் டயரப்
பாரிடங் குனிப்ப வாடிய பெருமான்
வையைகந் துருவினர் மலரா வறிவினைப் |
|
35
|
|
புலனிரை
மறைத்த புணர்ப்பது ப்லக்
குளிர்கொண் டுறையுந் தெளிநீர் வாவியை
வள்ளைசெங் கமலங் கள்ளவி ழாம்பற்
பாசடை மறைக்குங் கூடற் பெருமான்
செந்தாள் விடுத்துறை யந்தர்க டம்மினு |
|
40
|
|
மூவாத்
தனிநிலைக் கிருவரு மோருயிர்
இரண்டெனக் கவைத்தநல் லாண்டரு டோழியைச்
செருவிழு மிச்சையர் தமதுடல் பெற்ற
வின்புக நோக்கா வியல்பது போல
மருங்குபி னோக்கா தொருங்குவிட் டகலப் |
|
45
|
|
பொருந்திய
தெப்படி யுள்ளம்
மருந்தழற் சுரத்தி லொருவனன் பெடுத்தே. |
(உரை)
கைகோள், களவு. நராய் கூற்று
துறை: நற்றாய்
வருந்துதல்
(இ-ம்.) இதற்கு, தன்னும் அவனும்.....................அவ்வழி யிரிய
(தொல். 36) என்னும் நூற்பாவின்கண் அன்னபிறவும் என்ற விதி கொள்க.
1-4:
பொடி........................................ஒருவுக
(இ-ள்) மணிமிளிர்
பெருங்கட்கு இமைகாப்பு என்ன-கருமணி திகழ்கின்ற பெரிய கண்ணை இமைகள் பாதுகாக்குமாறுபோலே;
பொடித்து அரும்பாத சில் முல்லைக்கொடி மடந்தையள்-வெளிப்பட்டு முகிழாத இரண்டு முலைகளையுமுடைய
பூங்கொடி போன்ற மடப்பமுடைய என்மகள்; விழித்துழி விழித்தும்-விழித்த விடத்தே
விழித்தும்; அடங்குழி அடங்கியும்-அவள் துயிலுங்காற் சிறிது துயின்றும்; நின்று தன்னை
அளித்த-நீங்காது இருந்து தன்னைப் பாதுகாத்த; என்னையும்
|