இது முதற்பராந்தகனின் முதல் மகன் ; இராசாதித்தனால் கட்டுவிக்கப் பெற்றது என்பது கல்வெட்டுச் செய்தி. “கோவல னான்முகன் வானவர் கோனுங் குற்றவேல் செய்ய மேவலர் முப்புரந்தீ யெழுவித்தவன்ஓர் அம்பினால் ஏவலனார் வெண்ணெய் நல்லூரில் வைத்து எனை யாளுங் கொண்ட நாவலனார்க்கு இடமாவது நந் திருநாவலூரே.” (சுந்தரர்) -‘பன்னரிதாம் ஆவலூர் எங்களுடை யாரூர னாரூராம் நாவலூர் ஞானியருண் ஞாபகமே.’ (அருட்பா) அஞ்சல் முகவரி :- அ/மி. பக்தஜனேஸ்வரர் திருக்கோயில் திருநாவலூர் & அஞ்சல் - 607 204. உளுந்தூர்பேட்டை வட்டம், விழுப்புரம் மாவட்டம். 49. திருமுதுகுன்றம் விருத்தாசலம் | நடுநாட்டுத் தலம். திருமுதுகுன்றம் - தமிழ்ப்பெயர். விருத்தாசலம் என்பது சமஸ்கிருதப் பெயர். தற்போது வழக்கில் விருத்தாசலம் என்றே வழங்கப்படுகிறது. சென்னை - திருச்சி ரயில்மார்க்கத்தில் (Chord line) விழுப்புரத்தை அடுத்துள்ள ரயில் சந்திப்பு நிலையம், திருச்சியிலிருந்தும் விழுப்புரத்திலிருந்தும் பேருந்து வசதிகள் அடிக்கடி உள்ளன. இத்தலத்திற்கு ‘விருத்த காசி’ என்றும் பெயருண்டு. பண்டை நாளில் இத்தலத்துள்ளோர் காசிக்குச் செல்வதில்லை என்ற மரபு இருந்ததாகத் தெரிகின்றது. |