O வளர்ப்புத் தந்தை விரைந்தே முடித்தார் வாணிபம் எல்லாம். O விசாவே இன்றி வெளி நாட்டிற்கு விரைகிற மனதைப் போல மக்கமா நகரம் விரைந்தே வந்தார். O கண்ணின் மணியாய்க் காத்தார் அதுவரை அன்றிலிருந்து ... அறுபது வயதில் முதன்முதலாக முகிழ்த்த கருவை அடைகாத்திருக்கும் அன்னப்பெண் போல் ... பெரிதும் போற்றினார் பிள்ளை முகம்மதை ! காலக்குரல் O மலைகள் ... பூமி மகளின் புடைப்புகள் ! பள்ளத்தாக்குகளின் எதிர்ப்பதம் ! |