பக்கம் எண் :

நாயகம் எங்கள் தாயகம்117


O

 

வெளிச்சம் எல்லாம்

வில்லையாய் இறுகினால்

எப்படி இருக்கும் ; அப்படி இருந்த

முகம்மது முகத்தை

உற்றுப்பார்த்தார் ...

 

O

 

சீதளப்   புன்னகை

செய்தி வாசிக்கிற ...

சித்திர உதட்டில்

தம்மை இழந்தார் !

 

O

 

"இவர் -

மேற்கில் உதித்த

மேன்மைச் சூரியன்

அரபு மண்ணிலிருந்து ...

சிலை வணக்கத்தை

அறவே ஒழிக்கும்

ஈசா நபிகள் எடுத்துச் சொன்ன

இறுதித் தூதர் இவரே என்பேன்.

 

O

 

சூதர் சூழ்ச்சி நெருப்பு வளையம்.

மேன்மை மிக்க

மெழுகுவர்த்தியை

காப்பதும் கடனே!"

பகர்ந்தார் பஹீரா !