பக்கம் எண் :

116 வலம்புரி ஜான்


O

 

புல்லின் நுனியில் தானே

தானியங்கள் ...

அகதிமுகாம்

அமைத்திருக்கின்றன

என்று புகலாமல்

மண்ணில் மறைந்திருக்கும்

மழைக்கால விதையைக் கூட

மனத்தால் அறிகின்ற

மறை நூல் அறிஞர் இவர் !

 

O

 

இறுதித் தூதர்

வருவார் என்ற

இன்பச் செய்தியை

எண்ணி இருந்தார் !

 

O

 

ஆற்றுப் படுகை வெடிப்பிற்குள்ளே

ஆர்ப்பரிக்கின்ற நதியினைக் கண்டார்

அற்புத மனிதர்.

 

முகம்மது பெற்ற முன்னுரை !

 

O

 

முதிர்ந்த பெரியவர்

முகம்மது அவர்களைக்

கூர்ந்து நோக்கினார்

குறிப்பினை அறிந்தார் !