சிறகு விரித்தார் ... தந்தையைப் பிரிந்தால் தவிப்பேன் என்று புல்லாங்குழலில் புகுந்த காற்றாய் பிள்ளை முகம்மது - அவர் பின்னே நடந்தார் ... O சிரியா நாட்டில் ‘புஸ்ரா’ நகரம் ஆடிக்காற்றில் அவிழ மறுக்கும் கூந்தல் முடிச்சாய் குவிந்து கிடந்தது ! ... O பஹீரா மடமோ பணிய மறுக்கிற ஒற்றை முடியாய் ஓங்கி நின்றது ! O ‘பஹீரா’ என்பவர் பரம பிதாவிற்குப் பாத்திரமானவர். அவ்வப்போது ஆண்டவன் - அறிவித்த வேதங்களை ஆழ்ந்து படித்தவர் ! |
|
|