பக்கம் எண் :

நாயகம் எங்கள் தாயகம்143


O

 

ஊருக்கெல்லாம்

அவர்தம் வாழ்க்கை

குன்றில் எரிந்திடும்

கோடி தீபமாய் ...

 

O

 

கண்களில் வெளிச்சமாய் ...

மாலை நிழலாய் ...

மகிழ்ச்சிக் கவிதையாய் ...

ஈர நதியாய் ...

நதியின் சுழிப்பாய் ...

வசியச் சுரங்கமாய் ...

விரிந்து சிறந்தது !

 

O

 

நாற்பது வயது

ஆன கதீஜா

நாயகத்தை விட

மூத்தவர் எனினும் ...

இளைய நிலவாய்

அழகு ததும்பினார்;

முதிய நதியாய்

அலைகள் மீட்டினார் !

 

O

 

நாயகம் மணம் முடித்த

நற்செய்தி தாம் கேட்டு

பால்புகட்டிய பிள்ளைக்கு

வாழ்த்துமடல் வாசிக்க