பக்கம் எண் :

142 வலம்புரி ஜான்


இலக்கணத்தோடு

இயைந்த கவிதையாய்

இருவரும் அன்று

மரபுப் பாத்தியில்

மத்தளம் கொட்டினர் !

 

O

 

சந்தம் இணைந்த

சங்கதி போல

திருமண வாழ்வு

தித்திப்பானது !

 

O

 

தேடிச்சேர்த்த

தேட்டை எல்லாம்

கதீஜா அம்மா

நாயகத்திடத்தில்

நகர்த்தி மகிழ்ந்தார் !

 

O

 

அள்ளி வழங்கலும்,

கிள்ளித் தருதலும்

நாயகம் பொறுப்பு !

 

O

 

அவர்தம் கிளைகளை

கதீஜா அம்மையார்

வேராய் இருந்து

தாங்கிச் சிறந்தார் !