சுற்றிப் படர்ந்திட ஏற்ற கொம்பு நாயகம் என்றே ஏந்திழை நவின்றாள். O பெரியப்பாவிடம் சம்மதம் கேட்டார் சரியென்றார் அவர் ... நாயகம் தமது தலையினை அசைத்தார். கதீஜாவின் களிப்பு O கதீஜாவின் மனமாடத்திலிருந்து ஆயிரம் புறாக்கள் அன்றே பறந்தன ! ஆனந்த பைரவி பாடித் திரிந்தன ! O கோடைகால குளிர்மழை அடித்தால் பூமகள் புரண்டே படுப்பாள் ; புல்லரிப்போடும் கனவுகளோடும் புனிதவதியோ நாட்களை நகர்த்தினார் ! O குறித்த நாளில் திருமணம் நிகழ்ந்தது. |