பக்கம் எண் :

190 வலம்புரி ஜான்


நதி ஒன்று நடந்தே போனது !
 

கண்ணைக்குத்தும் இமைகள் !

 

O

 

உமரெனும் வேங்கைச்சிங்கம்

உள்வந்த பின்னர் இஸ்லாம்

கரிகாலன் வாளைப் போல

களத்தினில் ஓங்கி நிற்கும்.

திரண்டதாம் தேனைக்காக்கும்

திண்ணிய ஈக்கள் போல

இறைவனின் வேதம் காக்க

இயற்றினர் நாளும் நோன்பு.

 

O

 

வேலியில் பருத்தி உண்டே

வேட்டியா விளைச்சலாகும்?

முத்தென்றால் பாண்டிமுத்து.

முதிர்ந்த புளி தருவதில்லை.

அப்பளம் நிலவைப்போல

அமைந்தது என்று சொல்லி

இவை நோக்க முயலலாமா ?

முறைத்தார்கள் மற்றவர்கள்.

 

O

 

ஆயிரமாம் நரிகள் கூட

ஆரவாரம் செய்தபோதும்

பிறைநிலா சூட எண்ணும்