பக்கம் எண் :

238 வலம்புரி ஜான்


வயதானவர்களை

விடுவிப்பதற்கு பதிலாக...

இளைஞர்களை விடுவித்தால்

இரட்டிப்பு வேலை வாங்கலாமே

என்றனர்!

 

O

 

கைவிலங்குகளை

கனக மணி வளையல்களாக்குவதே

என் வேலை!

அல்லாவின்

கருணை ஒன்றுக்காகவே...

அடிமைச் சங்கிலிகளை

அறுத்தெறிகிறேன்

என்றார் அபூபக்கர்.

 

அபிசீனியாவில் அபலைகள்!

 

O

 

கடலிடம்

விடுமுறை எடுத்துக் கொண்டு

முட்டையிடுவதற்காக

முள்ளிக்கரைக்கு வருகிற

ஆமைகளைப் போல...

நொறுக்கப்பட்ட

முஸ்லீம்கள்

நபிகளிடம் வந்தனர்!

O