பக்கம் எண் :

262 வலம்புரி ஜான்


ஊமைகள் எழுதிய

உயிரில்லாத ஓவியத்தில்...

அல்லா என்கிற

திருநாமம் தவிர

அறிவிப்பு முழுவதும்

அழிந்து விட்டது !

 

O

 

அறைந்தார் நபிகள் -

பார்த்தவர் பதைத்தார் -

உண்மை பிறந்த

உத்தமர் நாவை

ஊரே புகழ்ந்தது !

 

O

 

பகிஷ்காரம்

பாதிவழியில் படுத்துவிட்டது...

 

O

 

ஆனந்தவெள்ளம்

அலைக்கரங்களை

நீட்டியது...

 

O

 

நபியின் பிள்ளைகள்

நாளும் மகிழ்ந்தனர்...