பக்கம் எண் :

264 வலம்புரி ஜான்


துன்பக் கடலில் தூயவர்!
 

அபூதாலீப் அடங்கினார் !

 

O

 

செறிந்த ஆலமரத்தின் கீழே

செழிப்பதில்லை செடிகள் என்பது...

பொதுவழக்கு!

 

O

 

பொது வழக்கைப் பொய்யாக்கி

வெயிலையெல்லாம் விலைபேசி

தான் வாங்கிக்கொண்டு...

நிழலை மாத்திரமே

முகம்மது என்கிற

பிள்ளைச் செடிக்கு

பிழிந்து தந்தவர்

அபூதாலிப்.

 

O

 

தேய்த்தால் வெளிப்படுகிற

அல்லாவுதீன் விளக்கின்

அற்புதமாக இல்லாமல்

முகம்மது நல்லார்க்கு

தேய்க்காமலே

தேவைகளை நிறைவேற்றிய

மூசாகாலத்து மன்னாவாக

இருந்தவர் அபூதாலிப்.