பக்கம் எண் :

நாயகம் எங்கள் தாயகம்265


* மனித வாமனமான

குழந்தை

தூங்குவதற்காகத்

தாலாட்டுப்பாடாமல்...

விழித்துக்கொள்ளுவதற்காகவே

தவப்பாடல் இயற்றிய

அன்னையாய், தந்தையாய்

அண்ணலைப் பொதிந்து

வளர்த்தவர் அபூதாலிப்.

 

O

 

ஊருக்குள் கடல் நுழைந்து

ஊர்வலம் போனபோதும்,

இந்தக் -

கரையோரத்துக் கலங்கரை விளக்கிலேதான்

கூடுகட்டிய மாடப்புறாபோல்

குலையாதிருந்தார்

நபிகள் பெருமான் !

 

O

 

புறப்பட்ட இடத்திற்கே

பொருட்கள் மீளுகின்றன

என்னும் -

பூகோள விதிக்கு...

அபுதாலீப்பும்

அடையாளம் ஆனார்.

 

* மன்னா என்பது தெரிந்து கொள்ளப்பட்டவர்கள் வாக்குத்தத்தின் பூமிக்குப்போனபோது
   இறைவன் வான்மழைபோல வழங்கிய அப்பங்கள். (விவிலியம்)