| மின்னலை அலகில் கோதி மேகத்தில் வீடுகட்டி அம்புலித் தட்டமீதில் மீன்களை அமுதமாக்கி அண்ணலே உன்னைப்பார்த்து அரும்பசி போக்கிக் கொண்ட குணவதி நாச்சியாரை கோமானோ மறந்தாரில்லை. மண்ணுக்குள் மறைந்து கொண்ட மாதாவைத் தேடித்தேடி பாத்திமா அழுதார் ; மற்றப் பிள்ளைகள் அரற்றினார்கள். ஆண்டாண்டு புரண்டபோதும் மறைந்தவர் வாராரென்று அரும்புகள் அறியமாட்டார். O ஆகவே அவர்தொடர்ந்தார். இருமியே இறந்துபோன நாட்களை நகர்த்தி விட்டு இதயத்தில் குத்து வாங்கிக் கொண்டு வருடம் வளர்ந்தது. |