பக்கம் எண் :

272 வலம்புரி ஜான்


மின்னலை அலகில் கோதி

மேகத்தில் வீடுகட்டி

அம்புலித் தட்டமீதில்

மீன்களை அமுதமாக்கி

அண்ணலே உன்னைப்பார்த்து

அரும்பசி போக்கிக் கொண்ட

குணவதி நாச்சியாரை

கோமானோ மறந்தாரில்லை.

மண்ணுக்குள் மறைந்து கொண்ட

மாதாவைத் தேடித்தேடி

பாத்திமா அழுதார் ; மற்றப்

பிள்ளைகள் அரற்றினார்கள்.

ஆண்டாண்டு புரண்டபோதும்

மறைந்தவர் வாராரென்று

அரும்புகள் அறியமாட்டார்.

 

O

 

ஆகவே அவர்தொடர்ந்தார்.

இருமியே இறந்துபோன

நாட்களை நகர்த்தி விட்டு

இதயத்தில்

குத்து வாங்கிக் கொண்டு

வருடம் வளர்ந்தது.