| கனவாய் நீ ஆனபோதும் கவிதையாய் வாழ்வாயம்மா ! தீன் குலத்தின் திருவிளக்கு மண்ணில் தேய்ந்தது ! அல்லாஹு அக்பரென்றே அன்பர் முழங்கினர். இஸ்லாமிய தீபம் வளர நெய்யாய் ஆயினாய் ! இன்பத்தமிழ் எழுத்தில் நீயோ மெய்யாய் ஆயினாய் ! தனிமரம் தோப்பாகாது என்ற பழமொழி - தொகுப்பிலிருந்து அன்று தொலைந்துபோனது ! O மனைவியே போனால் என்ன மக்கள் தாம் மறைந்தால் என்ன மறையவன் இருக்கும் போது மாநபி தோப்புத்தானே ? அப்பாவும் இல்லை - பெற்ற அம்மாவும் இல்லை என்றால் ஆண்டவன் ஒருவன் தானே அனாதை ஆவானப்பா ! |