பக்கம் எண் :

270 வலம்புரி ஜான்


இறுதி நாளில்

திரும்புவதற்காக

இறக்கை விரித்தது.

 

O

 

நாயகம் மீண்டும்

அனாதை ஆனார் !

 

O

 

தேற்றுவாரின்றித்

தேம்பினார் எங்கள் அண்ணல் ;

ஆற்றுவாரின்றி

அரற்றினார் எங்கள் வள்ளல் ;

மடிமீது வந்தமர்ந்த

மக்களைப் பார்த்துப் பார்த்து

துடிதுடித்தழுதார் ;

தரை வீழ்ந்த மீன்போலானார்.

 

O

 

என்று நான் காண்பேன்

எழில் மேகப் பந்தலென்றார் ;...

எப்படி வளர்ப்பேன்

பிச்சிப்பூத் தோட்டமென்றார் ;...

துறைமுகத்தைத்

தூர்த்து விட்டாய் ; கலங்கரைக்கு

உன்னையல்லால்

கதி எனக்கு இல்லையென்றார் ;

வறியவர் வந்து நின்றால்

வாரித்தருதல் நீதி ;

மரணமே வந்து நின்று

மாதாவே தருக என்றால்

உன்னையே வழங்கலாமா ?

உத்தமர் அழுகின்றாரே!