பக்கம் எண் :

274 வலம்புரி ஜான்


நபிகளின் இல்லத்தில் நந்தா விளக்கு !

   

O

 

நபிகள்-நாயனை

நினைத்தார்...

துன்பக் கற்களை

நடந்தே கடந்தார்.

 

O

 

மக்கா நகரின்

மணிப்புறாக்களெல்லாம்

அவரை

விழிகளுக்குள்

விழுத்தாட்டிக் கொண்டன !

 

O

 

இமைகள் படபடக்கிற போதெல்லாம்...

இருநூறு படங்கள் ;

இதயத்தின் இருட்டில்

கழுவப்படாமலே -   அவை

காவலில் வைக்கப்பட்டன !

 

O

 

அந்தக்

கோதுமை மேனியை பார்த்த

குருவிகளுக்கே

குதூகலம் வந்தது !