பக்கம் எண் :

நாயகம் எங்கள் தாயகம்275


அந்தப் பளிங்கு உடலின்

பச்சை நரம்புகளைப்

பார்த்து...

பூக்கள் -

புஷ்பவதிகளாயின !

 

O

 

குயில்கள்

கூடுகட்டத்தொடங்கின !

 

O

 

மான்களுக்கு

மசக்கை வந்தது !

 

O

 

குளிரில் வியர்த்த

குமரிகளை

இரவு

இளக்காரமாகப் பார்த்தது -

 

O

 

தூரத்திலேயே

நபிகளின் அழகினை

நகரத்துப் பெண்கள்

வசியக்கண் ஊசிகளால்

வடித்தெடுத்து விட்டார்கள் !