பக்கம் எண் :

276 வலம்புரி ஜான்


ஆனாலும்...

நபிகளின் கண்கள்

நாயனின் கால்களையே

நாடி நடந்தன !

 

விழாக்கோலத்தில் விதவை நிலா !

 

O

 

சௌதா என்பவர்

விதவை.

 

O

 

குறிலை உச்சரித்த

குயில் !

 

O

 

அபிசீனியாவில்

அத்தானை இழந்தவர் !

 

O

 

பக்கங்கள்

புத்தகமானதால்

அணிந்துரை கிடைத்திருந்தது !

 

O

 

மக்க மாநகரில்

துணை எழுத்தினைத்

தொலைத்து விட்ட

இந்த

இடையினத்திற்குக்

கால் அமைத்துக்காப்பாற்ற

எவரும் வரவில்லை !