பக்கம் எண் :

92 வலம்புரி ஜான்


முத்தலீஃப் கதை முடிந்தது !

 

 

O

 

நாட்களுக்கு

நரை விழுந்தது ...

 

O

 

அபுதாலீஃப், நாயகத்தின்

அப்பா -

அப்துல்லாவின்

உடன் பிறந்த பெருமகன்

உயிருக்குள் பொதிந்து உறவை வளர்த்தார்.

 

O

 

முத்தலீஃப் என்ற

முதுபெரும் மனிதர்

கண்களை மூடினார் !

கனவாய் ஆயினார் :

பழுத்த பழம் இது.

ஓசையின்றி

உதிர்ந்து விழுந்தது !

 

O

 

விழுந்த பழமிது ...

விருட்சத்தை அன்றோ

அடைகாத்து நின்றது !