பக்கம் எண் :

நாயகம் எங்கள் தாயகம்91


இவரது விரல்களை

உலர்த்துவது தவறு.

 

O

 

முகம்மது

மாதவச் செல்வர்

மனத்தில் இருத்து.

 

O

 

அனாதைக் குழந்தை இது

அன்பாய் வளர்த்துவா.

 

O

 

சிறுவர்களின் கனவுகளில்

தலையணைக்குள்ளே

தங்குகிற

கலர்மிட்டாய் போல

தூக்கம் கலையவும் கூடாது ;

தலையணையைத்

தூக்கவும் ஆகாது !

அப்படி வளர்த்து வா !

 

O

 

முகம்மது அவர்கள்

கன்னக்கதுப்பினில்

மின்னித்திரிகின்ற

கள்ளச் சிறு நகையாய் ...

பொந்திலிருந்து

இசைவெள்ளம் சிந்திடும்

பூங்குயிலாய் ... வளர்ந்தார் !