பக்கம் எண் :

90 வலம்புரி ஜான்


அபூதாலீஃப் மடியினிலே

அடைக்கலமே ஆனார்கள்.

 

O

 

நாவல் பழம் போன்ற

முத்தலீஃப் கண்ணிரண்டும்

நழுவி விழுந்தது ;

நாளெல்லாம் அழுதது.

 

அண்ணல் அடைக்கலமானார்

 

O

 

உப்புநீர்ப் பூக்களை

உதறி முடித்த பின்னர்

முத்தலீஃப் பேசினார் ...

அபூதாலீஃப்

அப்பா முகம் பார்த்ததில்லை ;

அம்மாவின் அன்பும்

கிடைத்ததில்லை ...

 

O

 

நெஞ்சில் வடுப்படாமல்

நேசித்து வளர்த்து வா

நெல்லிலே உமி ;

நீரிலே பாசி ;

நிலவிலே களங்கம் ;

இயற்கையாய் இருக்கலாம் ;

ஆனால்,

தென்றல் கூட

உத்திரவு இல்லாமல்