பக்கம் எண் :

நாயகம் எங்கள் தாயகம்89


பணக்காரன் நீ இல்லை.

பிள்ளைகளும் அதிகம் இல்லை.

உரைப்பதெல்லாம்

உண்மைதான் ;

தகுதி உண்டு உன்னிடத்தில்

என்றாலும் ...

ஆறுவயதுப் பிள்ளை என்று

ஆரும் கருதல் ஆகாது!

இது -

எடைக்கல்லும் அல்ல ;

எதிர் அமரும் கிழங்கும் அல்ல ;

இறைவன் கைத்தாராசு.

ஆகவே -

அவரிடமே கேட்போம்

ஆண்டவன் சித்தம்

என்றார் முத்தலீஃப்.

 

O

 

அதிக நாள் வாழ்ந்திரேன்

அன்புப் பிள்ளாய்!

நான் வளர்ப்பேன் என்று

நால்வர் வந்துள்ளார்.

உம் விருப்பம் என்ன ?

உதிர்ந்தார் முத்தலீஃப்.

 

O

 

சூரியனை உமிழுகின்ற

சுத்தவெள்ளைத் தாமரைபோல்

முகம்மது மலர்ந்திட்டார்

எழுந்தார் ; நடந்தார் ;