பக்கம் எண் :

88 வலம்புரி ஜான்


முறுவல் பூத்தார் : எனினும் சொன்னார் -

புறப்படு ; போகலாம் என்று

சொல்லாமல் சொல்லும்

கைகாட்டி மரங்கள்

நாம் பெறும் குழந்தைகள் !

இறைவனைச் சுட்டும்

இன்பக் கேணிகள் - குழந்தைகள் !

இதுவரை உனக்குக்

குழந்தைகள் இல்லை.

மனிதக் காலையை

பார்க்காத உனக்கு

மழலையின் உச்சம்

எப்படிப் பிடிபடும்?

மன்னிக்க வேண்டும்

என்றார் பிதாமகர்!

 

O

 

அடுத்து வந்தார்

அப்பாஸ் என்பவர் ...

இவர்தம் குழந்தைகளை

எண்ணவோ

வேறு கைகளைத்தான்

விலைக்கு வாங்கவேண்டும்.

உள்ளது போற்று!

உனக்கேன் சங்கடம்?

உதறினார் முத்தலீஃப்.

 

O

 

அடுத்து வந்தவர்

அபுதாலீஃப் ...