பக்கம் எண் :

நாயகம் எங்கள் தாயகம்87


O

 

மக்களை அழைத்தார்.

அன்னை தந்தை அன்பறியாத

அனாதைக் குழந்தை

ஆர் வளர்ப்பீர்கள்?

கேட்டார் முத்தலீஃப் !

 

O

 

அபூலஹப் எழுந்து வந்தார்.

நான் வளர்ப்பதென்றால்

நல்லது என்றார் ...

முத்தலீஃப் பார்த்தார் -

நீ

 

பெரும்பணக்காரன்.

பொதுவாகவே

பணக்காரர்களிடத்தில் ...

ஈரம் இடம் பெயர்ந்தால் தான்

பணச்செடி

பழுக்கத் தொடங்குகிறது !

 

O

 

ஆகவே ...

அனாதையை வளர்க்கும்

ஆரம்பத் தகுதி கூட

உனக்கு இல்லை

அறைந்தார் முத்தலீஃப் !

 

O

 

அடுத்து ஹம்சா வந்தார்.

முத்தலீஃப் அவரை நோக்கி