எவர் வளர்ப்பார் ஏந்தல் முகம்மதை? O பாட்டனார் முத்தலீஃப்பை பருவம் - பதம்பார்க்கத் தொடங்கியது ... அவரது முதுகு வானவில்லைப் போல வளையத் தொடங்கியது ... O தோலின் சுருக்கங்கள் மலை ஏறுகிறவர்கள் வெட்டிய படிக்கட்டுகளைப் போல மதர்த்து நின்றன ! O அல்லா என்னை அழைக்கிறான். புறப்படுவதற்கு முன்னர் அநாதையான முகம்மதுவை உரியவரிடம் ஒப்படைக்கவேண்டும் ! O கவலை கட்டிய கண்ணீர்க் கூடுகளால் முத்தலீஃபின் புருவக் கிளைகள் ... முறியத் தொடங்கின ! |