பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
இரண்டாம் தொகுதி

142

திருவாய்மொழி - இரண்டாம் பத்து

படியாய் வந்து கலந்தான் என்றார்; நான்காம் பாட்டில், மேல் உவமையாகச் சொன்ன பொருள்கள் நேர் நில்லாமையாலே, அவற்றைச் சிக்ஷித்துச் சேர்த்துக்கூறி அனுபவித்தார்; ஐந்தாம் பாட்டில், அவைதாமும் உவமையாக நேர் நில்லாமையாலே, அவற்றைக் கழித்து உபமேயந்தன்னையே அனுபவித்தார். ஆறாம் பாட்டில், ‘இப்படி எல்லாரைக்காட்டிலும் வேறுபட்ட தன்மையினையுடைய இறைவன், முத்தன் தன்னை அனுபவிக்குமாறு போன்று, தான் என்னை அனுபவித்தான்’ என்றார்; ஏழாம் பாட்டில், தமக்காக இராமன் கிருஷ்ணன் முதலிய அவதாரங்களைச் செய்தான் என்றார்; எட்டாம் பாட்டில், ‘அவனை என்னாற்பேச முடியாது’ என்றார்; ஒன்பதாம் பாட்டில், துணை தேடிக் கொண்டு மீண்டும் பேசுவதற்குத் தொடங்கினார்; ‘பத்தாம் பாட்டில்’, ‘இப்படிகளால் என்னோடே கலந்து இம்மகாகுண ஒன்றையும் பேச என்றால் சால மிறுக்குடைத்து’ என்றார்; முடிவில், இது கற்றார்க்குப் பலம் சொல்லித் தலைக் கட்டினார்.

திருவாய்மொழி நூற்றந்தாதி

        அந்தாமத்து அன்பால் அடியார்க ளோடுஇறைவன்
        வந்துஆரத் தான்கலந்து வண்மையினால் - சந்தாபம்
        தீர்ந்தசட கோபன் திருவடிக்கே நெஞ்சமே!
        வாய்ந்தஅன்பை நாடோறும் வை.
                        

(15)

ஆழ்வார் எம்பெருமானார் சீயர் திருவடிகளே அரண்.