க
பத்தாந்திருவாய்மொழி
- பா. 7 |
279 |
கிறி என நினைமின்
-‘இது நல்லுபாயம்’ என்று புத்தி பண்ணுங்கோள். கீழ்மை செய்யாது - நான் சொல்லுகிறது ஒழியத்
தண்ணிய வானவற்றைச் செய்ய நில்லாமல். தண்ணியவாவன, வேறு பிரயோஜனங்களில் ஆசையும்,
சிற்றின்ப ஆசையும், உறி அமர் வெண்ணெய் உண்டவன் கோயில் - உறிகளிலே சேமித்துக் கள்ளக்கயிறு
உருவி வைத்த வெண்ணெயைத் ‘தெய்வங் கொண்டதோ? என்னலாம்படி களவுகண்டு அமுது செய்தவன் வந்து
வாழ்கிற தேசம். 1இத்தால், ‘அனுகூலருடைய பரிசமுள்ள பொருளால் அல்லது தரிக்கமாட்டாதவன்’
என்பதனைத் தெரிவித்தபடி.
மறியொடு பிணைசேர்
மாலிருஞ்சோலை - குட்டியும் தாயும் பிரியாமல் வாழ்கிற தேசம். 2இதனால், 3‘ரக்ஷ்ய
ரக்ஷகங்கள் தம்மில் பிரியாமல் வாழ்கின்ற தேசம்’ என்பதனைத் தெரிவித்தபடி. நெறிபட அதுவே நினைவது
நலமே -4நெறிபடுகைக்கு நினைக்குமதுவே இவ்வாத்துமாவுக்கு நன்மையாவது. இனி,
‘நெஞ்சிலே 5அடிபடும்படியாகத் திருமலையைச் சொல்லுமதுவே நன்மையாவது’ என்று
கூறலுமாம். ‘அத்தை நினைக்குமதுவே விலக்ஷணம்; அஃது ஒழிந்தவை எல்லாம் பொல்லாதவை’ என்பார்,
‘அதுவே நினைவது நலமே’ என்கிறார்.
(6)
218
நலம்என நினைமின்
நரகுஅழுந் தாதே;
நிலம்முனம் இடந்தான்
நீடுஉறை கோயில்
மலம்அறு மதிசேர்
மாலிருஞ் சோலை
வலம்முறை எய்தி
மருவுதல் வலமே.
பொ-ரை :
நன்மையானது என்று நினைமின், நரகத்தில் அழுந்தாமல்; பிரளயங்கொண்ட காலத்தில் வராகமாகி நிலத்தைக்
கேட்டால் குத்தி எடுத்து வந்தவன் நித்தியவாசஞ்செய்யுங்கோயில், களங்கமற்ற சந்திரன் சேர்கின்ற
திருமாலிருஞ்சோலை மலையை முறையாய் வலம் வந்து சென்று சேர்தல் வலிமையாகும்.
_____________________________________________________________
1. ‘இத்தால்’ என்றது,
களவு கண்டு அமுது செய்தமையைச் சுட்டுகிறது.
2. ‘இதனால்’ என்றது, மறியொடு
பிணை சேர்ந்திருத்தலைச் சுட்டுகிறது.
3. ரக்ஷ்ய ரக்ஷகங்கள் - காக்கப்படுகின்ற
பொருள்களும், காக்கும் இறைவனும்.
4. நெறிபடுகை - வழியிலே செல்லுகை.
5. அடிபடுதல் - சத்தையுண்டாதல்.
|