வ
280 |
திருவாய்மொழி -
இரண்டாம் பத்து |
வி-கு :
‘அழுந்தாதே வலம் எய்தி மருவுதல் வலம்’ எனக்கூட்டுக.
இனி, ‘அழுந்தாதே உறை கோயில்’ எனக் கூட்டலும் ஆம். அழுந்தாது - அழுந்தாமலிருக்க.
‘கோயிலாகிய மாலிருஞ்சோலை’ என்க.
ஈடு :
ஏழாம் பாட்டு. ‘திருமலையைச் சென்று கிட்டி எப்பொழுதும் அங்கு வாசம் செய்கையே இவ்வாத்துமாவுக்கு
வெற்றி,’ என்கிறார்.
நலம் என நினைமின் - நான்
சொல்லுகிற வார்த்தையை நன்மை என்று புத்திபண்ணுங்கோள். இனி, ‘இவ்வுலக விஷயங்களுக்கு எல்லாம்
வேறுபட்ட சிறப்பினையுடைய உறுதிப்பொருள் என்று புத்தி பண்ணுங்கோள்’ என்று கூறலுமாம். நரகு அழுந்தாதே
- பிரிவால் வரும் துன்பத்தை நுகராமல். ‘ஆயின், ‘நரகு’ என்பது, பிரிவுத் துன்பத்தைக் காட்டுமோ?’
எனின், நரகங்களும் இவர்களுக்கு முடிவு செய்யப்பட்டனவாய் அன்றோ இருப்பது? ‘காட்டில் போமது
துக்கம்; படை வீட்டிலே இருப்பது சுகம்’ என்று அருளிச்செய்தார் பெருமாள்; அங்ஙனம் அன்று, சுக
துக்கங்கள் வடிவந்தோறும் முடிவு செய்யப்பட்டதாய்க்காணும் இருப்பது; 1‘உம்மோடு
கூடிய யாதொரு வாசம் உண்டோ, அது சுகமாகிறது; உம்மை ஒழியப் படை வீட்டில் இருக்கும் இருப்புத்
துக்கமாகிறது; இதிஜாநந் - தந்தாமுக்கு இல்லாதவை பிறர் பக்கலிலே கற்று அறிய வேணுங்காணும்;
பராம் பிரீதிம் - உம்மைப்போல் நிறுத்து அல்லகாணும் என்னுடைய பிரீதி இருப்பது?’ என்று கூறினார்
இளையபெருமாள்.
‘நன்று; நம்மில் உனக்குப்
பிரீதி மிக்கது எனச்சொன்னாய்; அதற்கு நம்மைச் சொல்லுகிறது என்?’ என்ன, ‘கச்ச ராமமயாஸஹ.
‘என்னோடு கூடிப் புறப்படும்’ என்றும், 2‘அக்ரதஸ்தே கமிஷ்யாமி - நான் புறப்பட்டபடியே,
என்னை முன்னே போக விட்டுப் பின்னே வரப்பாரும்,’ என்றும் கூறுகிறார் மேல். ‘ஆயின், பிராட்டிமார்க்கு
அன்றோ பிரிவு நரகமாகத் தோற்றும்? ஆடவரான இவர்க்கு அப்படித் தோற்றுமோ?’ எனின், 3‘இராகவரே!
உம்மாலே பிரிந்திருக்கப் பெற்ற பிராட்டி இலள் ஆவள்; நானும் அவ்வாறே; பிழைத்திருப்போமேயாயின்,
தண்ணீரினின்றும் எடுக்கப்பட்ட மீன் போல ஒரு முகூர்த்த காலமே உய்ந்திருப்போம்’ என்றார்
அன்றே இளையபெருமாள்?
_______________________________________________________
1. ஸ்ரீராமா. அயோத். 30 :
18.
2. ஸ்ரீராமா. அயோத். 27 :
9.
3. ஸ்ரீராமா. அயோத். 53 :
31.
|